அரியலூர் மாவட்டத்தின் திருமானூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: இந்திய அளவில் முக ஸ்டாலின் முக்கிய இடத்தை வகித்து வருகிறார், தமிழ்நாட்டை தாண்டியும் பாஜக-விற்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரண்டி வந்துள்ளார். மோடி ஆட்சியில் எதிர்கட்சிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. டெல்லி முதல்வரின் கைதை இந்தியாவைத் தாண்டியும் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும் கண்டித்துள்ளன.மோடி ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அரசில் உருவாக்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் தற்போது 1 நாள் தான் வேலை கிடைக்கிறது மீதி 99 நாட்கள் வேலை கிடைப்பதில்லை என்று ஏழைகள் புகார் கூறுகின்றனர்.மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் மாநிலங்கள் இருக்கும் மாநில உரிமைகள் இருக்காது.மொழிகள் இருக்கும் மொழி உரிமை இருக்காது.பாஜக- அதிமுக கொள்கை ரீதியாக பிரிந்து செல்லவில்லை. ஒரு அந்தரங்க உடன்பாட்டின் அடிப்படையில் தான் பிரிந்து இருப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.நாளையே அதிமுக வில் சிலர் வென்றால் பாஜகவிற்கு ஆதரவு தருவார்கள். எனவே பாஜக ஆட்சி அமைவதை தடுக்க இந்தியா கூட்டணியின் சின்னமான பானைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
விசிக தேசிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற சிதம்பரம் – விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் – தொல்.திருமாவளவன் பேச்சு
அதிமுக -விற்கு வாக்களித்தாலும் அது பாஜக-விற்கு வாக்களித்ததாக தான் பொருள்- தொல்.திருமாவளவன் பேச்சு
அதிமுக-பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம் – பிரச்சாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு
அரியலூரில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார் தொல்.திருமாவளவன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வழக்கமான தேர்தல் அல்ல- சங் பரிவார் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர்.அதிமுக அணி வேறு பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை- பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களே தெரியும். அதிமுக-வும் பாஜக-வும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.மக்கள் விரோத சட்டங்களான வேளாண் மசோதா – குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கிய காரணம் அதிமுக-பாமக கட்சிகள்.இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் தான் என்று பேசியவர் நரேந்திர மோடி.இன்றைய பாஜக சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி- அவர்களுடன் இணைந்துள்ளனர் பாமக.சமூக நீதியை பாதுகாக்கவே திமுக காங்கிரஸ் -கம்யூனிஸ்ட்- விசிக-வுடனான கூட்டணியை நெருக்கடிகள் வந்தலும் தொடர்ந்து வருகிறார்.நாடாளுமன்றத் தேர்தலில் கூடஅதிமுக-வினர் பாஜக வை விமர்ச்சிக்க மாட்டார்கள்- திமுக வினரைத் தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜக வை விமர்ச்சிக்காதவர்கள் அதிமுக என்பதை மக்கள் உணர வேண்டும்.இந்த பிரச்சாரத்தில் போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உடனிருந்தனர்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசு தலைவர் துரவுபதி முர்மு அவர்களை பிரதமர் மோடி அவமதித்து உள்ளார்- திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணி வென்றால் விலைவாசி குறையும், வேலைவாய்ப்புகள் பெருகும்- என்றார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை குறைத்து வருகிறார் மோடி. ரேசன் கடைகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மோடி.
அரியலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திருமாவளவனிடம் சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு அம்பேத்வளவன், எழில் செல்வன் என குழந்தைகளுக்கு பெயரிட்டு மகிழ்ந்தார் திருமாவளவன்
தொல் திருமாவளவன் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டம் இருக்காது- ரேசன் கடை இருக்காது – இட ஒதுக்கீடு இருக்காது – 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் இருக்காது – பெண்கள் படிக்க முடியாது- பிரச்சாரத்தில் திருமாவளவன் பேச்சு
4 சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் 1 நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும் நமது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் நாம் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றால் சின்னம் நமக்கு சொந்தமாக இருக்கும்.
2026 ம் தேர்தலில் நமது சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம்- திருமாவளவன் பேச்சு