திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காமராஜர் சிலை அருகில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இதில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், தலைமைச் செயற்குழு ஞானதிரவியம், திமுக மகளிர் அணியைச் சார்ந்த விஜிலா சதியானந்த, வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம் பெல், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தலிலே காங்கிரஸ் பெயர் இயக்கம் தேர்ந்தெடுத்த உங்கள் முன்னாள் இருக்கக்கூடிய வேட்பாளர், நம்முடைய முதல்வர் ஆசிபெற்ற வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கைச்சின்னத்திலே வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். வரக்கூடிய தேர்தல் என்பது எப்போதும் நாம் சந்திக்கின்ற தேர்தல் போல் இல்லை. இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவில் ஒரு தேர்தல், ஏனென்றால் நிச்சயமாக இந்த தேர்தலுக்குப் பிறகு ஒன்றியத்தில் பாஜக மீண்டும் வராது.ஆனால் ஒரு விபத்து போன்று அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்றால், இதுதான் இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தல் என்பது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு யாரும் வந்து ஓட்டு கேட்க மாட்டார்கள் சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் இந்த தேர்தல், நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இந்த தேர்தல், சாமானிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல், மீனவர்களுடைய உரிமைகள், விவசாய மக்களுடைய உரிமைகள் இங்கே இருக்கக்கூடிய சகோதரர்களின் உரிமைகள் இதையெல்லாம் மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரதமர் தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது வரவில்லை மிகப்பெரிய பாதிப்பு தூத்துக்குடி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்திலும் வந்தபோது எட்டிக் கூட பார்க்கவில்லை. நிதி அமைச்சரை அனுப்பினார் ஆனால் ஒரு ரூபாய் கூட வரவில்லை. அந்த நிதி அமைச்சரைக் கூட்டிக்கொண்டு எல்லா இடங்களையும் காண்பித்தது நமது நிதி அமைச்சர். இவ்வளவோ கஷ்டங்களைக் காண்பித்த பிறகும் அவர்கள் நிதி கொடுப்பார்கள் என்று பார்த்தால், நிவாரணம் தருவார்கள் என்று நினைத்தால் ஒன்றும் வரவில்லை.இந்த பக்கம் பிரதமர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் தேர்தல் வந்த பிறகு பிரதமர் தமிழ்நாட்டுக்குத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார். ஆனால் எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் ஓட்டு தேறாது என்றும், மூன்றாவது இடத்திற்கு முயற்சி செய்வோம் என்று பிரதமர் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார். நோட்டாக்கு கீழே போய் தான் பழக்கம், இந்த தடவையாவது மூன்றாம் இடத்துக்கு வரலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.தேர்தல் வந்தவுடன் தமிழ் மொழியின் மேல் பாசம் வந்துவிட்டது பிரதமருக்கு. திருக்குறள் சொல்லுவார், ஆனால் அது திருக்குறளா என்று நாம் கண்டுபிடிக்க முடியாது. தமிழ் தான் மிகவும் பழமையான மொழி என்று பிரதமர் கண்டுபிடித்துள்ளார். திடீரென்று பாசம் வந்துவிட்டது எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார், நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்ற வருத்தப்படுகிறார். நீங்கள் எங்களையெல்லாம் இந்தி கற்றுக்கொள் என்று சொல்கிறீர்கள் அதே மாதிரி நீங்களும் தமிழை கற்றுக் கொள்ளுங்கள் நம்முடைய முதலமைச்சர் கிட்ட சொன்ன உடனே ஒரு நல்ல ஆசிரியர் பார்த்து நிச்சயமாக டெல்லிக்கு அனுப்பி வைப்பார். இதன் பிறகு நீங்கள் டெல்லியில் இருக்க மாட்டீர்கள், நீங்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்றுக் கொடுப்பது பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நிச்சயமாகத் தமிழ் கற்றுக் கொள்ளலாம்.ஆனால் இந்த பக்கம் பிரதமருக்கு திடீரென்று தமிழ் பாசம் வந்துவிட்டது, அந்தப் பக்கம் அவர்கள் தமிழ்நாட்டில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை தமிழ் மக்களுடைய போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசி உள்ளார். அந்தப் போராட்டத்தைப் பிஞ்சு போன செருப்புக்குச் சமம் என்று கூறுகிறார் என்று அவ்வளவு வாய்த் துடுக்கு, துணிச்சலாக பேசுகிறார். இங்குள்ள அனைத்து குடும்பிகளிலிருந்தும் யாராவது ஒருவர் இந்தி எதிர்ப்பில் கலந்து கொள்ளாத குடும்பங்கள் இருக்க முடியாது. எத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்தார்கள் தமிழ் மொழிக்காக இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை ஒருவர் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். அப்படி என்றால் அதுதான் பாஜகவின் உண்மையான முகம்.தமிழ்மொழி மேல், தமிழர்கள் மேல் அக்கறை கிடையாது மரியாதை கிடையாது. இங்கே நமக்கு எல்லாம் வர வேண்டிய வரியை எடுத்துக் கொண்டு திருப்பித் தருவது ஒன்றும் கிடையாது. நிவாரணம் கேட்டால் ஏன் கெஞ்சுகிறீர்கள் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்முடைய தமிழ்நாடு நிதி அமைச்சர் இருக்கிறார், அவர் பலமுறை சொல்லி இருக்கிறார் ஒரு ரூபாய் நம்மிடம் இருந்து வரியை வாங்கிட்டு போய் திருப்பிக் கொடுக்கிறது 25 அல்லது 26 பைசா என்று. இதே ஒன்றிய அரசாங்கம் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குக் கொடுக்கிறது 2 ரூபாய் 2 பைசா. இப்படித் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கக் கூடிய பாஜக ஆட்சி. எந்த பிரச்சினையைப் பேசினாலும் அதற்குப் பதிலாக இன்னொரு பிரச்சனை தான் பேசுவார்களே தவிரக் கேட்கக் கூடிய கேள்விக்குப் பதில் வராது. உலகத்திலேயே பெரிய ஊழல் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது தேர்தல் பத்திரம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள் அதைப்பற்றி நம் கேள்வி கேட்கிறோம், எப்படி இப்படிப்பட்ட ஊழலை ஒரு சட்டம் போட்டு சட்டப்பூர்வமாக ஊழல் செய்யக் கூடியவர்கள்,இந்த உலகத்துக்கே கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள்.மோடி பேசும் போது சொல்வார் நாங்கள் எல்லாம் கரம் படாத கரங்கள் ஏன்று. ஆனால், மிகப்பெரிய ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்தான். தேர்தல் நிதியில் பணம் வாங்கி இருக்கிறார்கள் யாரும் தானாக முன்வந்து தரவில்லை. ஒரு நிறுவனத்துக்கு, ரைடு விடுவார்கள் அங்கு இருக்கக் கூடிய முதலாளிகளிடமிருந்து தேர்தல் பத்திரம் வாங்கப்படும், 50 கோடிக்கு 100 கோடி அதற்கு மேலே வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு அந்த வழக்கு காணாமல் போய்விடும் இதுதான் பாஜக தொழில் செய்பவர்களை மிரட்டி வாங்கிய பணம்.
இப்படி தான் தேர்தல் பத்திரங்களை பாஜக வாங்கிக் கொண்டிருக்கிறது அது மட்டுமில்லை எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை தலைவர்களும் மீதும் 90% மேல் வழக்கு உள்ளன. பிரதமரைக் கேட்டால் நாங்கள் தப்பே பண்ண மாட்டோம், அவர்கள் தப்பு செய்தல் கேஸ் போடுகிறோம் என்று. யார் மேல் கேஸ் உள்ளதோ அவர்கள் பாஜகவுக்கு வந்து விட்டார்கள் என்றால் உடனே கேஸ் காணாமல் போய்விடும். போட்ட கேஸ் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். ஆனால் தொடர்ந்து இவர்களை எதிர்த்தால் என்றால் கேஸ் இருக்கும், கேஸ் இருக்கா இல்லையா அவர்களைச் சிறைக்கே அனுப்பப்படக்கூடும்.இரண்டு முதலமைச்சர்களைச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக டெல்லியின் துணை முதலமைச்சர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி பெயில் கொடுக்கவில்லை. இப்படி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி முடக்க, எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்ய தேர்தல் நேரத்தில் சரியாகப் பார்த்து காங்கிரஸ் உடைய வங்கிக் கணக்கில் எல்லாம் முடக்கி விட்டார்கள். பழைய விஷயங்களைக் காட்டி வங்கிக் கணக்கை முடக்கி விட்டார்கள்.தேர்தல் பாத்திரம் பற்றி உலகம் பேச ஆரம்பித்த பிறகு, ஜெர்மனி அமெரிக்க போன்ற நாடுகள் எல்லாம் இப்படித் தவறுதலாக வாழ்க்கை பதிவு செய்து முதலமைச்சர்களை சிறைக்கு அனுப்புகிறாள் என்று கேள்வி கேட்ட பிறகு தொடங்கியவுடன், ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால் மக்களைத் திசை திருப்ப வேண்டும், அதுதான் பாஜகத் தெரிந்த அரசியல். மக்களைத் திசை திருப்பி மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி அதுல இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பார்கள் நாம் எல்லாம் ஒன்றாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஜக தன்னுடைய அரசியல் காக என்று மதத்தினர் தனித்தனியாகப் பிரித்து அதற்கு உள்ளே ஒரு அரசியல் உருவாக்கி அதில் குளிர் காயலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தென்னிந்தியாவில் அதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கவில்லை ,தமிழ்நாட்டில் சுத்தமாக இடமில்லை. ஆனால் இப்பொழுது நமது வட இந்தியாவில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளைப் பற்றிப் புரிந்து கொண்டீர்கள் அவர்களுக்கு வேலை கிடையாது, எந்த படித்த இளைஞர்களுக்கும் வேலை கிடையாது. ராகுல் காந்தி சொன்னார் 45 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம் மிக மோசமாக இருக்கக்கூடிய சூழல் இதுதான் என்று.இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி, இப்படிப்பட்ட மக்கள் விரத ஆட்சி, அவர்கள் இரண்டு பேருக்காக ஆட்சி நடக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி என்றால் தள்ளுபடி செய்ய மாட்டார்கள் ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி வேண்டும் என்றால் 68 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். நம்ம விமான நிலையம் விரிவாக்கப்பட வேண்டும் பன்னாட்டு விமான நிலையம் ஆக்க பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையமாக, பெரிய விமானம் மாற்றப் கொடுக்கப்பட்டது. அவர்களை கல்யாணத்தை கிப்ட் கொடுத்து இருக்கிறார் பிரதமர். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பேசினார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பட்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அண்ணா சிலை பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.பிரச்சாரத்தில் பேசிய இந்தத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலும், தேவை இல்லாமல் ஒரு சட்டமன்றத் தேர்தல் ஆனால் தேவையான ஒரு வேட்பாளரோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக விஜய் வசந்த் அவர்கள் இங்கே கை சின்னத்தில் போட்டியிடுகிறார் அதே போல விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாரகை கத்பட் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். உங்களுக்கு அதிகமாகத் தாரகை பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தாரகை பல வருடங்களாகத் தெரியும், எப்பொழுதும் மென்மையாகப் பேசக் கூடியவர்கா இருந்தாலும் ஒரு போராட்டம் என்றால் முதலிலே களத்தில் நிற்கக்கூடிய ஒரு சகோதரி தான் தாரகை. நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து உங்களுடைய பிரச்சனைகளை முன்னின்றி தீர்க்கக்கூடிய ஒருவர் தான் தாரகை. சில பேர் இந்த பக்கமே வர மாட்டார்கள், முன்னாடி இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஆனால் என்னமோ நெனச்சு காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றார்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரு நன்மை நடந்திருக்கிறது. அது எங்கள் தாரகை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இங்கே இருக்கக் கூடிய அடித்தட்டு மக்கள், இங்க இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் குரலாகவும் நம்முடைய சட்டமன்றத்தில் அவர் ஒலிப்பார் என்ற நம்பிக்கையோடு உங்களுடைய பொன்னான வாக்குகளைத் தாரகை அவர்களுக்கு கை சின்னத்தில் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.அதேபோல் நம்முடைய விஜய் வசந்த்,அவருடைய தந்தையார் இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுடன் பணியாற்றிய ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களுடைய குரலாக இயக்கக் கூடியவர். அதே வழியிலே இன்று தம்பி விஜய் வசந்த் அவர்கள் தொடர்ந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே ஒரு புன்னகை பூத்த முகத்தோடு, மக்களை நிதானமாக செயல்படக்கூடிய ஒரு சிறந்த மக்களவை உறுப்பினர். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். ஏனென்றால் இந்த தேர்தலில் நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் ஒரு பெரிய விபத்து நடந்து,மறுபடியும் பாஜக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும், அதன் பிறகு நாம் ஓட்டு கேட்கப் போக முடிந்த, ஓட்டுப் போடவும் முடியாது ஒரு ஆட்சி சர்வாதிகார ஆட்சி ஒருவரையே சுற்றி இருக்கக் கூடிய ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அதுதான் நிரந்தரம் என்று மாறிவிடும், ஜனநாயகம் இருக்காது.ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துக்கும் வழி விடச் சொன்னார் கனிமொழி. தொடர்ந்து பேசிய கனிமொழி, இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல், சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு. நம் ஒருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் பாஜக மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை தொடர்ந்து மதத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு நாங்கள்தான் அரணாக இருக்கிறோம் என்று இந்து மதத்தை நாங்கள் தான் காப்பாற்றினோம் என்று சொல்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ காலமாக இருக்கக்கூடிய மதத்தை ஒரு கட்சி தான் வந்து காப்பாத்தணுமா? எந்த மதத்தையும் எந்த கட்சியும் வந்து காப்பாற்ற அவசியம் இல்லை. மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மக்களுடைய நம்பிக்கை. அதனால் இந்து மதத்தை, இந்து மக்களை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு மதத்தின் மீதும், பெரும்பான்மை மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.பெரும்பான்மை மக்கள் மீது அக்கறை இருந்தால், சொன்னது போல் இந்து மாணவர்களுக்கு எல்லாம் உதவித்தொகை கொடுப்போம் என்று சொன்னார்கள், வந்ததா? ஒன்றும் வரவில்லை. அதேபோல் பெரும்பான்மை மக்களுக்காக 15 லட்சம் வங்கியில் போடுவதாகச் சொன்னார்கள், வந்ததா? இப்படி பெரும்பான்மையே இருக்கக்கூடிய மீனவர்களுக்கு எதிரான சட்டங்கள், பெருமை இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டங்கள் சட்டங்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய பாஜக பெரும்பான்மை மக்களுக்கு காப்பாற்ற ஏதாவது செய்திருக்கிறார்களா, இல்லை? 44 பாஜக எம்பிக்கள் பெண்கள் மீதான குற்றங்களைச் செய்து அதன்படி அவர்கள் மேல் வழக்கு இருக்கிறது, நாடாளுமன்றத்திலே இன்றும் இருக்கிறார்கள்.இதுதான் நீங்கள் பெண்களைக் கடவுளை மறக்கக்கூடிய வழியா? இப்படித்தான் பெண்களை மதிக்கிறீர்களா. மணிப்பூர், நான் சென்று அங்கே இருக்கக்கூடிய நிலையைப் பார்த்தேன். அத்தனை மக்களும் அங்கே முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பால் இல்லை, வயதானவர்களுக்கு மருந்து மாத்திரை இல்லை, அடிப்படைத் தேவைகள் இல்லை, சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லை ஆனால் அப்படி இருக்கும் நிலையிலும் இரண்டு சகோதரிகளுக்கு, ஆயிரம் பேருக்கு மேல அவர்களை அசிங்கப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்திச் சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளைச் செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் உலகம் பூரா சுற்றுகிற மோடி அவர்களால் மணிப்பூர் சென்று அந்தப் பெண்களையோ, முகாம்களில் இருக்கக்கூடிய மக்களைப் பார்க்க மனதில்லை.
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது பார்க்கவில்லை, தேர்தல் வந்தவுடன் வாரத்திற்கு நான்கு முறை, ஐந்து முறை அடிக்கடி மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்காக வருகிறார். ஆனால் மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா நிவாரணம் கொடுக்கவில்லை இதுவரைக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள், இந்துக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை. உண்மையிலேயே பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை என்று பாகுபாடு பார்க்காமல் அத்தனை பேருக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது பார்க்கவில்லை, தேர்தல் வந்தவுடன் வாரத்திற்கு நான்கு முறை, ஐந்து முறை அடிக்கடி மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்காக வருகிறார். ஆனால் மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா நிவாரணம் கொடுக்கவில்லை இதுவரைக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள், இந்துக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை. உண்மையிலேயே பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை என்று பாகுபாடு பார்க்காமல் அத்தனை பேருக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.100 நாள் வேலைத் திட்டம், சோனியா காந்தி அவர்கள் வலியுறுத்தி UPA அரசாங்கத்தால் திமுக அங்கம் வகித்துக் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் வருடம் வருடம் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறது. நான் கூட பட்ஜெட்டில் பேசும்போது கேட்டேன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி குறைத்துக் கொண்டே வருகிறீர்களே எப்படி வேலை கொடுப்பீர்கள் என்று கேட்டேன்? தேவை ஏற்படும் போது நாங்கள் அதை ஏத்திக் கொடுப்போம் என்று சொன்னார்கள். அப்போது விஜய் வசந்த் அங்கே இருந்தார், ஆனால் அதிகரிக்கவே இல்லை.நாடு முழுவதும் யாருக்குமே 100 நாள் வேலை கிடையாது. 20 நாள் 30 நாள் கிடைத்தாலே பெரிது விஷயம். அந்த நாளுக்கும் சம்பளம் சரியாக வருவதில்லை. ஆறு மாதங்கள், நான்கு மாதமாகச் சம்பளம் வருவதில்லை. நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன் நம்முடைய ஆட்சி அங்கே இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன் 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் 400 ரூபாய், அதை திமுக மட்டும் சொல்லவில்லை, அதைக் காங்கிரசும் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். அதேபோல காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் இருப்பதைப்போல், தேர்தல் முடிந்த பிறகு நாடு முழுவதும் பிள்ளைகள் பயன்படக்கூடிய வழிகளில், உத்தரப் பிரதேசத்தில் இருக்கக் கூடிய பிள்ளைகளுக்குக் கண்டிப்பாக, திராவிடம் மாடல் அரசு திட்டத்தை நீட்டிக்கப்படும்.திடிரென்று பிரதமருக்கு தமிழ் மீது ஆசை வந்துவிட்டது, எத்தனை நாட்களாக நம்மை இந்தி படி, இந்தி படி என்று சொல்வார்கள். ஆனால் இப்போது எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள், எங்களை இந்தி படிக்க சொல்கிறீர்கள், நீங்களும் தமிழ் படிங்க யார் வேண்டாம் என்று சொல்வார்கள். நாங்களே ஒரு வாத்தியாரை அனுப்புகிறோம். நீங்கள் தமிழ் படியுங்கள் யார் வேண்டாம் என்றார்கள்.அண்ணாமலை தமிழ் சொல்லித் தர மாட்டார் அவர் கர்நாடகாவில் வேலை செய்யும்போது. நான் கன்னடக்காரன் என்னைத் தமிழன் என்று சொல்லாதீர்கள். நான் பெருமையாகச் சொல்லுவேன் கன்னடக்காரன் என்று. அண்ணாமலை இப்பொழுது தேர்தல் நேரத்தில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை, மக்கள் உயிர்நீத்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அது பிஞ்சு போன செருப்பு என்று அண்ணாமலை சொல்கிறார் என்றால் அதே வழியில் எனக்கும் பதில் சொல்லத் தெரியும். ஆனால் உனக்கு அந்த தரம் இல்லை என்று விட்டுவிடுகிறேன். தேர்தல் நேரத்தில் எங்கள் மக்கள் உங்களுக்குச் சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்று பேசினார்.