பிரச்சாரத்தை தொடங்கினார் திருமாவளவன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அரியலூரின் வாரணாசியில் பரப்புரையை தொடங்கினார். தமிழ்நாடு போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் அவர்கள் திருமாவளவன் வரவேற்று அவருடன் இணைந்து பானை சின்னத்திற்து ஆதரவு கோரி பிரச்சாரம் பணியில் ஈடுபட்டார்.
மோடியின் ஆட்சியில் நாடு வளரவில்லை அவரின் நண்பர்கள் தான் வளர்ந்துள்ளனர்- திருமாவளவன் குற்றச்சாட்டு
அரியலூர் கீழப்பாவூரில் நடந்த பிரச்சாரத்தில் தொல். திருமாவளவன் பேச்சு:
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக 2018ல் இருந்து இயங்கி வருகிறது. 3 பெரிய தேர்தல்களில் கட்டுக்கோப்பாக இயங்கி வந்துள்ளது.இந்தியாக்கூட்டணியை உருவாக்கியதில் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது.மோடி ஆட்சியில் அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 4 வந்து இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மோடியின் ஆட்சியில் நாடு வளராமல் நண்பர்கள் தான் வளர்ச்சியடைந்து வருகின்றனர்.மோடி மீண்டும் வராமல் தடுக்க பானை சின்னத்திற்கு வாக்களித்து மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவும்- என்று பேசினார்.
நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரலாக ஒலித்தவர் திருமாவளவன்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு: இந்தியாவின் கூட்டணியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் நம்முடைய குரலாக ஒலித்தவர். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவரின் குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி செய்யவேண்டும்.
and also ; ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு