மரக்காணம் பகுதியில் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரும் வாக்கு சேகரிக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் நாடாளுமன்ற விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் இன்று மரக்காணம் பகுதியில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இன்று பாலக்காடு, அழகன் குப்பம், பூமிஸ்வரன்கோயில் பகுதியில் வாக்கு சேகரித்தார், உடன் தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
டீ போட்டுக் கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர்
விழுப்புரம் நாடாளுமன்ற விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்காணம் பஸ் நிலையம் அருகே உள்ள கடைத்தெருவில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பேருந்து நிலைய டீ கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் அவர்கள் முதல் நாள் பிரச்சாரத்தை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்காணம் பேரூராட்சி பகுதியில் உள்ள தாழங்காடு கழிகுப்பம் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வெற்றி வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளர் ரமணன் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் மலைச்சாமி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் விசிக நிர்வாகிகள் நாவரசு மயிலா வளவன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு வெற்றி சின்னமான பானை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி கேட்டுகொண்டனர் அப்போது மீனவ சமுதாய பொதுமக்கள் இடையே பேசிய வெற்றி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஒட்டுமொத்த மீனவ மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்து மீனவ மக்களும் மீன் பிடிக்க உரிமம் வாங்க வேண்டும் என்ற சட்டத்தை நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்றம் அனுப்பியதின் மூலம் தான் அச்சட்டம் நிறுத்தப்பட்டது மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்தாள் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் பட்டியலில் மீனவ சமுதாயத்தை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதி அளித்தார்
AND ALSO : The team of FamilyStar celebrated the festival of colours