விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விழுப்புரம் சிக்னல் அருகே தொடங்கிய இந்த பேரணியில், திமுக ஆட்சியில் விழுப்புரத்திற்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் அமைச்சர் பன்னீர்செல்வம் பொன்முடி.முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த மோடி, இந்தியா கூட்டணியை வருமான வரித்துறை போன்ற துறைகளை கொண்டு முடக்கி வருகின்றனர்.டெல்லி முதல்வரை கைது செய்துள்ளனர்.தேர்தல் நெருங்கும் போது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.எடப்பாடி என்றாவது மோடியை எதிர்த்து பேசியுள்ளாரா?? நம்ம சிவி.சண்முகமாவது எப்போவது பேசி வருகிறார். ஏனென்றால் மோடி மீது எடப்பாடிக்கு பயம்.ரவிக்குமார் கடந்த முறை வென்றதை விட அதிகமாக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர் அணியினருக்கு டெபாசிட் போக வேண்டும்.
விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
எட்டாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். 13 நாடாளுமன்ற தொகுதிக்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு வந்துருக்கிறேன். வரும் வழியில் மக்கள் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்று வாழ்த்து வழி அனுப்பினார்கள். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக ரவிக்குமார் வெற்றி பெறுவார்.இது பிரச்சாரக்கூட்டமா அல்லது வெற்றி விழா ? என்று கேள்வி எழுப்பினார்.வாக்கு சேகரிக்க தான் வந்தேன். ஆனால் என்னை விட நீங்கள் தான் மிகுந்த ஆர்வமாக இருக்கீர்கள். பானை சின்னத்தை வேண்டுமென்றே முடக்கி வருகின்றனர்.சின்னம் கிடைத்தாலே நமக்கு பாதி வெற்றி.ரவிக்குமாருக்கு வாக்களிக்கும் வாக்கு மோடிக்கு வைக்கும் வேட்டு.கடந்த முறை கோ பேக் மோடி என்றோம் இந்த முறை கேட் அவுட் மோடி என்று சொல்ல வேண்டும்.குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.அப்படி செய்தால் நான் வாரம் இருமுறை இந்த விழுப்புரத்திற்கு வந்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.எனவே நீங்களும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.தொடர்ந்து திமுக ஆட்சியில் விழுப்புரத்திற்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். அவர் அளித்த வாக்குறுதிகளை நிச்சியமாக நிறைவேற்றி தருவார்.மு.க.ஸ்டாலின் யாருடைய காலைப்பிடித்து முதல்வராக இல்லை. நான் பாதம் தாங்கி பழனிச்சாமியை குறிப்பிடுகிறேன்.கோவிட் தொற்றின்போது எந்த வித உதவியையும் செய்யாமல் தட்டை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்றது தான் மோடி செய்தது.கோவிட் தொற்றின்போது தமிழக முதல்வர் தானும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு, மருத்துவமனைக்கு சென்று நோயை தடுக்கும் பணியில் ஈடுபட்டார்.கடும் நிதிநெருக்கடியிலும் ஆட்சிக்கு வந்த முதல் நாளே மகளீருக்கான இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தால் 460 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தான் இத்திட்டத்தின் வெற்றி திராவிட மாடல்.திமுக ஆட்சியில் பெண்களுக்காக இயற்றப்பட்ட மகளீர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.தேர்தல் அறக்கையில் சொல்லாத திட்டங்களான காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கான கல்வித் தொகை போன்றவற்றை செயல்படுத்தினார்.திராவிட மாடலின் திட்டங்களை மற்ற மாநிலங்களை பின்பற்றி வருகின்றனர்.இந்த தேர்தல் முடிந்தபிறகு மகளீர் உரிமைத் தொகையில் விடுபட்ட பெண்களுக்கும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.பிரதமர் மோடியும் பாதம்தாங்கி பழனிச்சாமியும் மதுரைக்கு வந்து ஒரே ஒரு கல்லை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லி விட்டு சென்றனர்.நானாவது எய்ம்ஸ் மருத்துவமனை கல்லைக்காட்டினேன். ஆனால் பழனிச்சாமி பல்லைக்காட்டினார்.பிரதமரை பார்த்து சிரிக்கக் கூடாதா என்று பழனிச்சாமி கேட்கிறார்.இப்போ மோடியை பார்ப்பதே கேவலமான ஒன்றாக மாறியுள்ளது.நான் பிரதமரை சந்தித்துப் போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கேட்டேன் அடுத்த முறை செஸ் விளையாட்டுப்போட்டியின் பாராட்டு விழாவிற்கு வந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுமுடித்தற்காக எடப்பாடியை பாராட்டினார்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியை 29 பைசா என்று அழைக்க வேண்டும். அவரும் ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு செல்லாக்காசு தான்.
தமிழ்நாட்டின் இயற்க்கை பேரிடரில் ஒன்றிய அரசு ஒரு பைசாக்கூட கொடுக்கவில்லை.ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா கூறினார். அவரின் பெயர் ஆர்.என்.ரவி இல்லை ஆர்.எஎஸ்.எஸ்.ரவி., சங்கி ரவி.வின்னர் பட வடிவேலுவை போல சட்டமன்றத்திற்கு வந்து அம்பேத்கர், பெரியார், அண்ணாவின் பெயரை மறுத்தார். உடனே கைப்புள்ள ஆளுநர் ஓடிவிட்டார். அமைச்சர் பொன்முடி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரை மிகவும் கடுமையாக கண்டித்தது. பதவியேற்பு விழாவில் ஆளுநரிடமே பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்றா கூறி வாழ்த்தும் பெற்றார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பேசினார்
மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக-காரர்களுக்கு தூக்கம் இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
40க்கும் 40 தொகுதிகளை வென்று கலைஞரின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுப்போம்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உளுந்தூர்பேட்டையில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்குசேகரித்தார்.2014ம் ஆண்டு 450 ரூபாயாக இருந்த கேஸ் விலையை இன்று ரூ1100 உள்ளது. தேர்தல் வந்தவுடன் ரூபாய் 100யை குறைந்துள்ளனர்.இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கேஸ் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் டீசல் விலைகளையும் குறைக்கப்படும்ன்னு தலைவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.பிரதமர் மோடி அவர்களை இனிமேல் மிஸ்டர் 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். நாம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 0.29 பைசா மட்டுமே தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துள்ளது.பாஜக-வை சேர்ந்த அறிவாளி நான் எய்ம்ஸ் மருத்துவமனையை திருடிவிட்டேன் என்று புகார் அளித்துள்ளார்.ஸ்ரிப்ட்டை மாற்றி பேசு என்று எடப்பாடி பேசுகிறார். நீங்கள் ஆளுக்கு தகுந்தவாறு மாற்றி மாற்றி பேசுவீர்கள். ஆனால் நாங்கள் அப்படி பேசமாட்டேன். சமூக நீதிக்காக பேசுவேன்.பழனிச்சாமியை போன்ற துரோகி அரசியல்வாதியை இந்திய அரசியலில் பார்க்க முடியாது.அதிமுக – பாஜக கள்ளக்காதல். பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது அதிமுக.2010 ம் ஆண்டே நீட் தேர்வு வந்தபோதும், ஏழை எளிய மாணவர்களை பாதிக்கப்படக்கூடாது என்று கலைஞர் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்காமல் தடுத்தார்.ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தலைவர்களால் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வந்தது. அனிதா இருந்திருந்தால் இன்னேரம் மருத்துவர் ஆகியிருப்பார்.தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் பாஜக அரசு உதவி செய்யவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தலா 6000 ரூபாய் வழங்கினார்.அடுத்த 19 நாட்களும் மக்கள் தான் விசிக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
AND ALSO ; The team of FamilyStar celebrated the festival of colours