விழுப்புரத்தில் தொடங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி உடனிருந்து வாக்கு சேகரித்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் திருக்கோவிலூரில் தேர்தல் பரப்புரை செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி கவுதம சிகாமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இதில் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்தாலே போதும். திமுகவை எதிர்க்கும் வலுவை அதிமுக இன்று இழந்து நிற்கிறது. அதனால் அதிமுக ஒரு பொருட்டாகவே இல்லை. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்க வலுவான கட்சிகள் இல்லை என்கிற நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டை தாண்டி தேசிய அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார். பத்தாண்டு கால பாசிச பாஜக ஆட்சியை அதிகாரத்தில் இருந்து தூக்கி ஏறியும் தன்முனைப்போடு அனைத்து தரப்பு ஜனநாயக அமைப்புகளையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி கண்டுள்ளார் என கூறினார்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரம் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெரியாரின் வழியை பின்பற்றும் நமது ரவிக்குமாரை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும். சின்னம் பெரிதல்ல நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் தான் முக்கியம். யார் வரவேண்டும் என்பதை மட்டுமல்ல யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள்.
இதில் பேசிய திருமாவளவன், உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி, அம்பானி இடம்பிடிக்க உதவும் பிரதமர் நரேந்திர மோடி உழைக்கும் மக்களின் வாழ்வு முன்னேற என்ன செய்தார்?
AND ALSO : IngaNaanThaanKingu movie event stills