தேவையனவை (உருண்டைக்கு):
துவரம் பருப்பு 1 கப்,
காய்ந்த மிளகாய் 4,
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
எண்ணெய் 1 டீஸ்பூன்,
கடுகு 1/4 டீஸ்பூன்,
சீரகம் 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்
தேவையானவை:(குழம்புக்கு):
புளி பெரிய எலுமிச்சம் பழம் அளவு,
நல்லெண்ணை 2 டேபிள் ஸ்பூன்,
சாம்பார் பொடி 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது,
பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை (உருண்டை):
துவரம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி கலந்து வைக்கவும்.
செய்முறை (குழம்பு):
புளி 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். அடிகனமான கடாயில் நல்லெண்ணை ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து, புளி கரைசலை சேர்க்கவும். பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்கும்போது உருண்டையை உருட்டி குழம்பில் போடவும். முதலில் 4 உருண்டைகள் மட்டும் போடவும். கிளறக் கூடாது . உருண்டை வெந்து மேலே மிதக்கும். அப்பொழுது அடுத்த செட் 4 உருண்டைகளைப் போடவும். இந்த அளவிற்குப் பத்து உருண்டைகள்வரை செய்யலாம். இந்த நேரம் மிதமான தீயில் வைத்து அதிக நேரம் கொதிக்கவிட்டால் குழம்பு சற்று ‘திக்’காக வரும். உருண்டைகள் உடையாது.பருப்பு உருண்டை குழம்பு தயார்.