தேவையான பொருட்கள் :
ஒரு கப் பச்சரிசி,
ஒரு ஸ்பூன் பயத்தம் பருப்பு,
மூணு கப் வெல்லம், அரை கப் தண்ணீர்,
முக்கால் கப் நெய்,
50 கிராம் முந்திரி,
50 கிராம் திராட்சை,
அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்,
ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம்,
பால் ரெண்டு கப்.
செய்முறை:
வெண்கலப்பானையில் இரண்டு கப் பால், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் பானையில் சேர்க்கவும். அரிசி, பருப்பு கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பை தயார் செய்யவும். பொடிசெய்த வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி தயாரான மற்றொரு அடுப்பில் வெல்லத் தண்ணீரை திக்காகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். சாதம், பருப்பு குழைய வேகவேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்க்கவும். அரிசியும் பருப்பும் நன்றாகக் குழைந்ததும் வெல்லக் கரைசலை சேர்க்கவும். இரண்டும் நன்றாகச் சேர்ந்து கொதித்து சர்க்கரை பொங்கல் பதம் வந்தும் அதில் ஏலக்காய்தூள், பச்சை கற்பூரம் சேர்க்கவும். நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரி, திராட்சை வறுத்து தயாரான சர்க்கரைப் பொங்கலில் போடவும். மேலும் நெய் தேவையெனில் சேர்க்கலாம். சூடான, சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
பொங்கல் வாழ்த்துகள்