ஒரு கட்சியினுடைய கூட்டு சேர்வதும் சேராததும் அந்த கட்சியினுடைய நிலைப்பாடு – துரை முருகன்
தங்கள் கருத்துக்கு வீதியில் எதிர்ப்பு வருகிறது என்றால் அதை எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும் என்பதை உச்ச நீதி மன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் – காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவது குறித்து அமைச்சர் துரை முருகன் கருத்து…
கர்நாடகாவில் இருந்து இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர் வரவேண்டி உள்ளது,நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துரை முருகன் பேட்டி
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்…
அப்போது பேசிய அமைச்சர் துரை முருகன்,
கர்நாடக,தமிழகம் பதற்றமான சூழலுக்கு நான் என்ன பண்ணுவது…
கர்நாடகாவில் பந்த் செய்வது பற்றி நான் ஒன்னும் சொல்லவில்லை…
ஆனால் ஒன்று சொல்கிறேன்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தான் கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்…
கூட்டாட்சி தத்துவத்தில் லேஜிஸ்டேடர், எக்சிக்யூடிவ்,ஜூடிசரி என மூன்று பிரிவுகளை சொல்கிறார்கள்…
இந்த மூன்றில் நீதி மன்றம் என்ன சொல்கிறதோ அதை தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள தனி அதிகாரம் அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்…
தங்கள் கருத்துக்கு வீதியில் எதிர்ப்பு வருகிறது அதை எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும் என்பதை உச்ச நீதி மன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தின் படி தமிழ்நாட்டிற்கு 13/9/2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நாளையோடு 15 நாள் கெடு முடிகிறது.இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் 2000,3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இன்னும் 11000 கன அடி தண்ணீர் நமக்கு வர வேண்டி உள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என நான் எதிர்பார்க்கிறேன்.
அதிமுக பாஜக பிளவு குறித்த கேள்விக்கு,
அடுத்த வீட்டில் நடக்கிற சமாச்சாரம்.இது வேறொரு கட்சியினுடைய விவகாரம். ஒரு கட்சியினுடைய கூட்டு சேர்வதும் சேராததும் அந்த கட்சியினுடைய நிலைப்பாடு.அதிமுக கூட்டணி முறிவு அவர்கள் வீட்டில் நடப்பது அதை பற்றி நாம் கருத்து சொல்ல முடியாது…
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்கிற கேள்விக்கு
எனக்கு தெரியாது என பதிலளித்த அமைச்சர்,அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் தான் உணர வேண்டும்…உணர்ந்துதான் இந்த முடிவை(நிலைக்கு வந்துள்ளார்கள்) எடுத்திருக்கிறார்கள் என கூறினார்…