தேர்தல் பத்திரம் மூலம் சட்டப்பூர்வமாக ஊழல் செய்த பாஜக – கனிமொழி கருணாநிதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி பகுதி அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், கழகத் தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலை இல்ல திண்டாட்டம் நடைபெற்று வருகிறது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார். இதுவரை இரண்டு பேருக்குக் கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை.சட்டப்பூர்வமாக ஊழல் செய்யலாம் என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாஜக ஊழல் செய்துள்ளது, இந்தியாவில் முழுவதும் உள்ள கட்சிகளின் தேர்தல் பத்திரம் நிதியை ஒருபுறமும் பாஜகவின் தேர்தல் பத்திர நிதியை மறுபுறமும் வைத்தால் முக்கால்வாசி நிதி பாஜகவிடம் தான் இருக்கும்.ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு பாஜக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை ஏவி சோதனை செய்கிறது என்றால், அந்த நிறுவனம் அதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அந்த நிறுவனம் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் அந்த நிறுவனத்தின் மீதான வழக்குகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படும்.உலகிலேயே இந்தியாவில் உள்ள ஜிஎஸ்டி வரியின் குழப்பம் எந்த நாட்டிலும் இல்லை, ஜிஎஸ்டி வரி படிவத்தில் சிறு தவறு இருந்தால் அதற்கு அவர்கள் விதிக்கும் அபராதத்தை கட்டுவதற்குப் பதிலாக நாம் தொழிலையே மூடிவிட்டு செல்லலாம் அந்த அளவிற்கு அபராதம் விதிக்கின்றனர்.புல்வாமா தாக்குதல் 40 வீரர்களின் உயிர் பறிபோனது பாஜகவின் அரசியல் காரணமாக நடைபெற்றது, என் உயிரை இந்தியாவிற்காக தியாகம் செய்கிறேன் என்று நினைத்து ராணுவத்தில் சேர்ந்த வீரர்களின் உயிரை அரசியலுக்காக பறித்துள்ளது பாஜக.இந்த தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம், நாம் நாட்டை பாதுகாக்க , நம் வீட்டை, நம் வீட்டுப் பெண்களை நம் மக்களைப் பாதுகாக்க இந்த ஆட்சியை நாம் விரட்ட வேண்டும். பாஜகவில் உள்ள 44 எம்பிகள் மீது பாலியல் குற்ற வழக்குகள் உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் 1.15 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் எனக் கூறியுள்ளது, நாம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தின் ஆயிரம் ரூபாய் உடன் கூடுதலாக இந்த திட்டம் வரவுள்ளது.
தமிழ்நாட்டின் குரலாக ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும், உங்கள் சின்னம் உதயசூரியன், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சின்னம் உதயசூரியன், நம் தளபதியின் சின்னம் உதயசூரியன் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இன்று இங்கு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவில்லை, அவர் இன்று இங்கு வந்திருந்தாலும் தெரிந்து இருக்கும் பாஜகவிற்கு இங்கு வாக்கு இல்லையென்று. நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் மோடி, தேர்தல் என்றவுடன் வாரத்திற்கு 5 முறை தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு நோட்டாவிற்கு கீழ் வாக்குப் பதிவு இருக்கும். இந்த முறை அந்த இடம் கூட அவர்களுக்கு இருக்கமா என்று தெரியவில்லை.ஒன்றிய பாஜகவிற்கு நாம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்று புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளது, மருத்துவ படிப்பில் மட்டுமே இருந்த நுழைவுத் தேர்வை இப்போது எல்லா படிப்பிற்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வரப் பார்க்கிறது.
1330 கோயிலுக்குக் கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டுள்ளது, எந்த வாய்ப்பும் வருமானமும் இல்லாமல் ஒரு கால பூஜை கூட செய்ய முடியாமல் இருக்கும் கோயில்களுக்கு 130 கோடி ஒதுக்கீடு செய்து, அக்கோயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல சிறுபான்மையினரை சேர்த்து பெரும்பான்மையாக உள்ள தமிழ்நாடு மக்களுக்கு நலனைச் செய்யக்கூடிய ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதானி, அம்பானி ஏதாவது வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, பூட்டான் நாடுகளிடம் பேசுவார்கள், ஆனால் மக்களுக்கு என்றால் ஒன்றுமே செய்யாது.உங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, முல்லைப் பெரியாறு ஆற்றிலிருந்து ஆண்டிப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு ஏற்று நிதி ஒதுக்கீடு செய்துள்ளது விரைவில் இந்த திட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.