பாஜகவின் ஏவலுக்கு வேலை செய்யும் ED, CBI, IT தான் மோடியின் குடும்பம் – கனிமொழி கருணாநிதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசமரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: வந்திருக்கக்கூடிய எழுச்சி கூட்டத்தின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது தான் தெரிகிறது. ஏன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கே வரேன் வரேன்னு சொல்லிவிட்டு, ரத்து செய்கிறார் என்று இப்போதுதான் தெரிகிறது. இங்க இருக்கக் கூடிய மக்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட தேருமா தேரா தான் என்று தெரியவில்லை.இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டு பக்கமே வர மாட்டார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகக் கோரிக்கை வைத்தால் செய்து கொடுக்க மாட்டார். மழை புயல் பாதிப்பு வந்தவுடன் எட்டிப் பார்க்க மாட்டார். அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வருகிறார். எதாவது ஓட்டு வாங்கவேண்டும் என்ற கனவோடு மோடி இங்கே வந்து கொண்டிருக்கிறார், அவருக்குத் தெரியவில்லை தமிழ்நாடு என்பது பெரியாருடைய மண், பிரிவினைவாதங்களுக்கு இங்கு இடமில்லை என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மண்ணிலே மக்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த ஜாதி சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பாஜக ஆட்சி செய்யும் இடத்தில் மக்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிரித்து வைத்து அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு இடையே பிரச்சனை உருவாக்கி அரசியல் குளிர் காயக்கூடியது தான் பாஜக.
மணிப்பூர் மாநிலத்தில், பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்தது ஒரு வருடத்திற்கு மேலே அங்கே இருக்கிறவனுக்கு இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனையை ஆரம்பித்தது பாஜக. அங்கு யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை. முகாம்களில் மக்கள் இருந்து கொண்டு இருக்கின்றனர்.தமிழ் வளர்ச்சிக்குப் பைசா கொடுக்க மாட்டார்கள். சமஸ்கிருதத்திற்கு 10 மடங்கு பைசா கொடுப்பார்கள். தமிழ்நாடு என்றுமே அவர்களுக்குச் சரியான பாடத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் நமது வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் இருக்கிறார். டிடிவி தினகரன் அவர்கள் ஜெயலலிதாவின் படத்தைப் கட்டி ஓட்டு கேட்கிறார் ஆனால் பாஜக கூட்டணியில் இருக்கிறார். என் வாழ்க்கையில் நான் பண்ணப் பெரிய தப்பு பிஜேபியுடன் கூட்டணி வைத்தது, அந்த தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன் என்றார்.ஒரு தேர்தலில் இந்த லேடிய அல்லது மோடியை என்று கேட்டார்.எனக்குக் காரணம் என்ன என்று தெரியும், டிடிவி தினகரன் மேல் ஒரு கேஸ் இருக்கு 25 கோடி தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகார் என்ற வழக்கு இருக்கிறது. வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒன்று பிஜேபில் சேர வேண்டும், அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கணும். இதே போல வழக்குகள் இருக்கிறவர்களுக்கு, எதிர்க்கட்சியின் மீது ICE வைக்கிறது என்றால் Income Tax, CBI, ED இது மூன்றும் தான் மோடியோட குடும்பம்.பாஜகவை எதிர்த்துக் கூடிய தரணி இல்லாத ஒரே ஒரு காரணத்தினால், டிடிவி தினகரன் தற்போது பாஜகவில் கூட்டணி வைத்துள்ளார். எந்த தைரியத்தில் இங்கே வந்து வாக்கு கேட்கிறீர்கள், நீங்கள் எப்படி ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.. மக்களை எப்படி ஏமாத்தினர்களின் என்று தேனி தேர்ந்த மக்களுக்குத் தெரியும். ஒரு வாக்குக்காக மக்களை ஏமாற்றியவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடமாட்டார்கள்.கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் 1.15 மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதையும், இவற்றுடன் விடுபட்ட மகளிர்க்குத் தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன. காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏராளமான பணிக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர், நாம் அறிவித்துச் செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தை, நேற்று கனடா நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.நாம் ஒரு ரூபாய் நிதியாக ஒன்றியத்திற்கு வழங்கினால் நமக்கு நிதி பகிர்வாக 25 பைசா மட்டுமே வழங்குகிறது. இதுவே பாஜக ஆளும் மாநிலங்கள் என்றால் நிதி பகிர்வு இரட்டிப்பாக வழங்குகிறது. நேரடி நிதி வருவாயில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டில் தான் அதிகமான நிதி அளிக்கப்படுகிறது. முன்னணி மாநிலம் தமிழ்நாடு கிட்டத்தட்ட 6.24 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசருக்கு வழங்குகிறோம். ஆனால் அதில் திருப்பி கொடுப்பது 2.47லட்சம் கோடி தான். உத்தரப் பிரதேசம் அரசு ஒன்றிய அரசுக்குப் பணம் 2.70 லட்சம் கோடி ஆனால் அவர்களைக் கொடுக்கிறது என்றால் 10.8 லட்சம் கோடி, ஐந்து மடங்கு அவர்களுக்குத் திருப்பி தரப்படுகிறது.
ஏன் தமிழ்நாட்டு கொடுப்பதை விட மூன்று, நான்கு மடங்கு குறைவாகத் தருகிறீர்கள். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு நீங்கள் ஆட்சி செய்யக்கூடிய இடத்திற்கு ஐந்து மடங்கு அதிகமாகத் தருகிறீர்கள். அதேபோல் வெள்ள நிவாரணம் கேட்டால் ஒரு பைசா வருவதில்லை. ஆனால் உத்திரபிரதேசம். பீகாருக்கு அதிக அளவில் நிதி கொடுக்கப்படுகிறது.அதானி, அம்பானி ஆகியோருக்கு நடத்தக்குடிய ஆட்சி இந்த பாஜக ஆட்சி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக இருக்கிறது. அம்பானி வீட்டுக் கல்யாணத்திற்காகப் பாதுகாப்புப் படை விமான நிலையத்தை பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி திருமண பரிசு வழங்கியது.வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால் அவர்கள் ஒரு ரூபாய் கூட மக்கள் வங்கிக் கணக்கில் போடவில்லை, நாம் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருந்தால் அபராதம் என்ற பெயரில் நம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.திண்டுக்கல் இருந்து சபரிமலைக்குச் செல்லக்கூடிய செல்லும் பக்தர்களின் வசதிக்காக, லோயர் கேம்ப் வரை ரயில் வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது, ஒன்றியத்தில் தற்போது உள்ள ரயில்வே அமைச்சகம் நமக்கு என்றால் எதுவுமே செய்யாது. ஒன்றியத்தில் நமது ஆட்சி வந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும்.கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது, உத்தம பாளைய அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கான சிறப்புத் தனி சிகிச்சைப் பிரிவு நமது அரசு கொண்டு வந்துள்ளது. திராட்சை விவசாயிகள் புவிசார் குறியீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள் அதற்கான முயற்சிகளை செய்யப்படும்.நாம் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த உடன் சமையல் எரிவாயுவின் விலை ₹500 ஆகக் குறைக்கப்படும், அதேபோல் பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்பட உள்ளது என்று பேசினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இன்று இங்கு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவில்லை, அவர் இன்று இங்கு வந்திருந்தாலும் தெரிந்து இருக்கும் பாஜகவிற்கு இங்கு வாக்கு இல்லையென்று. நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் மோடி, தேர்தல் என்றவுடன் வாரத்திற்கு 5 முறை தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு நோட்டாவிற்கு கீழ் வாக்குப் பதிவு இருக்கும். இந்த முறை அந்த இடம் கூட அவர்களுக்கு இருக்கமா என்று தெரியவில்லை.ஒன்றிய பாஜகவிற்கு நாம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்று புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளது, மருத்துவ படிப்பில் மட்டுமே இருந்த நுழைவுத் தேர்வை இப்போது எல்லா படிப்பிற்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வரப் பார்க்கிறது.1330 கோயிலுக்குக் கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டுள்ளது, எந்த வாய்ப்பும் வருமானமும் இல்லாமல் ஒரு கால பூஜை கூட செய்ய முடியாமல் இருக்கும் கோயில்களுக்கு 130 கோடி ஒதுக்கீடு செய்து, அக்கோயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல சிறுபான்மையினரை சேர்த்து பெரும்பான்மையாக உள்ள தமிழ்நாடு மக்களுக்கு நலனைச் செய்யக்கூடிய ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதானி, அம்பானி ஏதாவது வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, பூட்டான் நாடுகளிடம் பேசுவார்கள், ஆனால் மக்களுக்கு என்றால் ஒன்றுமே செய்யாது.உங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, முல்லைப் பெரியாறு ஆற்றிலிருந்து ஆண்டிப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு ஏற்று நிதி ஒதுக்கீடு செய்துள்ளது விரைவில் இந்த திட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.