பாஜக மக்களை மதத்தாலும் ஜாதியாலும் பிளவுப் படுத்தி வருகிறது – கனிமொழி கருணாநிதி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூசாலிப்பட்டியில் வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தல் என்பது உண்மைக்கும், பொய்க்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல். திமுக என்றுமே அனைத்து மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது. பாஜக மக்களுடைய மதத்தால், ஜாதியால் பிரிவினை ஏற்படுத்தி பிளவு செய்யக்கூடியது.நம் மாணவர்கள் படிக்க கூடாது என்பதற்காக தான் ஒன்றிய அரசு நீட் நுழைவு தேர்வை கொண்டு வந்தது, அனைவருக்கும் மருத்துவம் என்பதை கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் தொடக்காமன நீதி கட்சி. பணம் இல்லாதவர்களுக்கும் மருத்துவம் என்று மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தனர்.இந்தியாவிலே அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலே அதிகமாக இளைஞர்கள், இளம் பெண்கள் படித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, ஒரு சில மாநிலம் தான் நமக்கு இணையாக உள்ளது.இங்கு கூசாலிப்பட்டியில் 65 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் கூட்டி குடிநீர் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.நாம் 1 ரூபாய் வரியாக செலுத்தி 26 பைசா தான் ஒன்றிய அரசு நமக்கு திரும்ப தருகிறது, அந்த 26 பைசா நிதி பகிர்விலும் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நமது அரசு வழங்குகிறது, மீதமுள்ள மகளிருக்கு தேர்தல் முடிந்தவுடன் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சென்ற முறை இந்த தொகுதியில் நான் நின்றபொழுது, எதிர்க்கட்சியினர் நான் சென்னையில் தான் முழுவதும் இருப்பேன் என தெரிவித்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களில் ஒருத்தியாக இதே தொகுதியில் இருந்தேன், உங்களுக்காக பணி செய்தேன் என தெரிவித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: பிரதமர் மோடி இங்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பொழுது, தமிழ் மொழி அருமையான மொழி, நான் தமிழ்நாட்டில் பிறந்து இருக்க வேண்டும் தமிழ் மொழி கற்று இருக்க வேண்டும் என இது எனக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்து இருந்தார். நாம் முதலமைச்சரிடம் கூறி ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை அவருக்கு நியமிக்கலாம்.ஹிந்தி மொழியை திணிக்க புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துவிட்டு, தேர்தலுக்காக தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கின்றார். நாம் ஒரு ரூபாய் நிதியாக அளித்தால் 25 பைசா மட்டுமே திருப்பித் தரும் ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் இரண்டு ரூபாயாக நிதி அளிக்கிறது.நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது நிதி அளிக்காமல் இருந்துவிட்டு, நிதி அமைச்சரிடம் நிதி கேட்ட பொழுது அதைப் பிச்சை என்கிறார். முன்னாள் நடிகை தற்போதைய பாஜகவில் உள்ள ஒரு நபர் மக்களுக்குத் தமிழ்நாடு அரசு அளிக்கும் மகளிர் உரிமை திட்டத்தைப் பிச்சை என்கிறார்.இது போன்றவர்களை, நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால், ஒன்றியத்தில் நமக்கான ஆட்சி அமைய வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், நாடும் நமதே நாற்பதும் நமதே எனத் தெரிவித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்தியாவிலேயே தீப்பெட்டி உற்பத்தியில் அதிகப்படியான பங்களிப்பு அளிப்பது கோவில்பட்டி தான், ஜி.எஸ்.டி வரி விதிபால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் மூலப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. இதை நம்பிய இருக்கும் பெரும்பாலான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். நாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிற்குக் கடிதம் மூலம் அழுத்தம் செய்தும், நானும் பாராளுமன்றத்தில் இது குறித்து வாதிட்டேன். அரசின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீப்பெட்டி உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று உலகத்திலேயே மிகப்பெரிய கார் தொழில் நிறுவனமான வின்பாஸ்ட் என்னும் தொழிற்சாலை நமது தூத்துக்குடியில் அமைய உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் 15 மாதத்தில் தொழிற்சாலையை உருவாக்கப்பட உள்ளது. தூத்துக்குடி இளைஞர்கள், இளம்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று கூறியுள்ளனர்.நம் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி தெரிவித்தார், இதுவரை செய்து உள்ளாரா இல்லை, மேலும் வங்கியில்
கணக்கில் பணம் குறைவாகவோ, அல்லது வேறு சில காரணங்களாகவோ அபராதம் எனக்கூறி நம் பணத்தை எடுத்து விடுகின்றனர். நமது ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற எந்த செயலும் நடைபெறாது.தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடம் கொடுத்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த தேர்தல் அமைந்திட வேண்டும். பாஜகவும், அதிமுகவும் ஸ்டிக்கர் கட்சிகள் தான், இரண்டுமே அமலில் உள்ள அரசின் திட்டங்களை, பெயர் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி அவர்கள், அந்த திட்டம் கொண்டு வந்தது போலக் காட்டிக் கொள்வர் என்று பேசினார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
and also : Aadu Jeevitham in four languages