பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: பிரதமர் மோடி இங்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பொழுது, தமிழ் மொழி அருமையான மொழி, நான் தமிழ்நாட்டில் பிறந்து இருக்க வேண்டும் தமிழ் மொழி கற்று இருக்க வேண்டும் என இது எனக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்து இருந்தார். நாம் முதலமைச்சரிடம் கூறி ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை அவருக்கு நியமிக்கலாம்.ஹிந்தி மொழியை திணிக்க புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துவிட்டு, தேர்தலுக்காக தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கின்றார். நாம் ஒரு ரூபாய் நிதியாக அளித்தால் 25 பைசா மட்டுமே திருப்பித் தரும் ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் இரண்டு ரூபாயாக நிதி அளிக்கிறது.நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது நிதி அளிக்காமல் இருந்துவிட்டு, நிதி அமைச்சரிடம் நிதி கேட்ட பொழுது அதைப் பிச்சை என்கிறார். முன்னாள் நடிகை தற்போதைய பாஜகவில் உள்ள ஒரு நபர் மக்களுக்குத் தமிழ்நாடு அரசு அளிக்கும் மகளிர் உரிமை திட்டத்தைப் பிச்சை என்கிறார்.இது போன்றவர்களை, நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால், ஒன்றியத்தில் நமக்கான ஆட்சி அமைய வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், நாடும் நமதே நாற்பதும் நமதே எனத் தெரிவித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்தியாவிலேயே தீப்பெட்டி உற்பத்தியில் அதிகப்படியான பங்களிப்பு அளிப்பது கோவில்பட்டி தான், ஜி.எஸ்.டி வரி விதிபால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் மூலப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. இதை நம்பிய இருக்கும் பெரும்பாலான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். நாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிற்குக் கடிதம் மூலம் அழுத்தம் செய்தும், நானும் பாராளுமன்றத்தில் இது குறித்து வாதிட்டேன். அரசின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீப்பெட்டி உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று உலகத்திலேயே மிகப்பெரிய கார் தொழில் நிறுவனமான வின்பாஸ்ட் என்னும் தொழிற்சாலை நமது தூத்துக்குடியில் அமைய உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் 15 மாதத்தில் தொழிற்சாலையை உருவாக்கப்பட உள்ளது. தூத்துக்குடி இளைஞர்கள், இளம்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று கூறியுள்ளனர்.நம் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி தெரிவித்தார், இதுவரை செய்து உள்ளாரா இல்லை, மேலும் வங்கியில் கணக்கில் பணம் குறைவாகவோ, அல்லது வேறு சில காரணங்களாகவோ அபராதம் எனக்கூறி நம் பணத்தை எடுத்து விடுகின்றனர். நமது ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற எந்த செயலும் நடைபெறாது.தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடம் கொடுத்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த தேர்தல் அமைந்திட வேண்டும். பாஜகவும், அதிமுகவும் ஸ்டிக்கர் கட்சிகள் தான், இரண்டுமே அமலில் உள்ள அரசின் திட்டங்களை, பெயர் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி அவர்கள், அந்த திட்டம் கொண்டு வந்தது போலக் காட்டிக் கொள்வர் என்று பேசினார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சண்முகசிகாமணி நகர் – பசுவந்தளை ரோடு பகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குகளை சேகரித்தார்..
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் பொழுது சமையல் எரிவாயுவின் விலை ₹410 ஆக இருந்தது. ஆனால் தற்பொழுது 1100 ஆக உள்ளது. நாம் வாக்குறுதிகள் அளித்தது போல சமையல் எரிவாயுவின் ₹500க்கு வழங்கப்படும்.நாம் இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக தொழிற்பேட்டை, கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் உருவாக்கி அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை என்ற நிலையையும் உருவாக்கியுள்ளோம்.பெரும்பான்மை மக்களுக்கு என ஏதும் செய்யாமல் அவர்களுக்கு எதிரான ஆட்சியாக நமது ஆட்சி இருந்து வருவதாகக் கூறும் அவர்களுக்கு இதுதான் சான்று, ஒரு கால பூஜை கூட பண்ண முடியாது சுழலில், கோயில்களுக்கு 130 கோடி ஒதுக்கீடு செய்து கோயில்களை புரணமைத்து, வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்த அரசு நமது அரசு.எனது நிதியிலிருந்து 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஒன்றியத்தில் உள்ளவர்களை விரட்டிய அடிக்க வேண்டும் என்றால் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்திதோப்பு பகுதியில் மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாதத்திற்குத் தூத்துக்குடிக்கு 10 முறை கூட வந்ததில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார், அவரை விட அதிகமாக இந்த பகுதிக்கு நான் வந்துள்ளேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கொரோனா காலத்தில், இந்தப் பகுதி மக்களுக்கு என பிரத்தேகமான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைத்தோம்.தூத்துக்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கில் புதிய டைட்டில் பார்க் என்னும் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது அதற்கான அறிவிப்பும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த கோவில்பட்டி பகுதியில் அதிகம் கடலை மிட்டாய் தயாரிக்கும் இடமாகும், ஆகையால் அதற்கென பிரத்தியேக மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக உள்ளூரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த கடலை மிட்டாய் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் செல்ல உள்ளது.மோடிக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளதாம், தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டுமாம், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். இப்போது கூட ஒரு பிரச்சனையும் இல்லை ஒரு நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் மோடி.இந்தி மொழிக்கு எதிரான போராட்டமான இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அண்ணாமலை அது ஒரு பிஞ்சுபோன செருப்பு என்று கூறியுள்ளார், இது நம் மொழிக்காகத் தியாகம் செய்த பலரின் உயிரை இழிவுபடுத்தும் செயலாகும்.இப்படியானவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது, நம்மையும் நம் மொழியையும் இழிவுபடுத்தும் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வந்துவிட்டது. நமது சின்னம் உதயசூரியன், கலைஞரின் சின்னம் உதயசூரியன் அண்ணன் தளபதியின் சின்னம் உதயசூரியன், வாக்களிப்பீர் உதயசூரியன் என தெரிவித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
and also : Aadu Jeevitham in four languages