வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த கனிமொழி கருணாநிதி
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி பெரிய மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி கணேஷ் பேக்கரி – மக்ரூன் தயாரிக்கும் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, தயாரிக்கும் முறை குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள லிங்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: மக்களவைத் தேர்தலில் மீண்டும் உங்களது வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடுகிறேன். கடந்த தேர்தலில் நான் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, இவர் சென்னையிலிருந்து வருகிறார். தேர்தல் முடிந்த பின்னர் திரும்ப வரமாட்டார் எனக் கூறினர். ஆனால், நான் தொடர்ந்து இந்த பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்க வந்து கொண்டுள்ளேன். கொரோனாஅலை பாதிப்பின்போதும், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மக்களை சந்தித்துள்ளேன். அந்தளவுக்கு இங்குள்ள மக்களோடு ஒன்றாக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம். மகளிர் உரிமைத் தொகை எனத் தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அளித்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இப்படிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி திமுக உள்ளது.ஆனால், ஒன்றிய பாஜக அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ரூ.15 லட்சம் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்போம் எனக் கூறினர். ஆனால், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையெனக் கூறி பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியமும் தரவில்லை. பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துவிட்டது.
100 நாள் வேலைத்திட்டம் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது என்பதால் அதனை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது. நிச்சயமாக ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 100 வேலைத் திட்டத்தில் நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். சம்பளமும் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக லிங்கம்பட்டி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, விரைவில் ஒன்றியத்தில் ஆட்சி மாற வேண்டும். ஏனென்றால், நமது வரிப்பணத்தை அனைத்தையும் வாங்கிக் கொண்டு சென்றுவிடுகின்றனர். ஒரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால் மாநில அரசுக்குப் பணம் தேவை. ஆனால், வரிப்பணத்தை அனைத்தையும் வாங்கிக் கொள்கின்றனர். ஆனாலும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். என்னுடைய மக்களுக்கான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி காட்டுவேன் என முதலமைச்சர் செயல்படுத்துகிறார் என்று பேசினார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
and also : Aadu Jeevitham in four languages