கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை பேரூராட்சியில், செட்டிகுறிச்சி ஊராட்சியில், கயத்தாறு பேரூராட்சியில், அகிலாண்டபுரம் ஊராட்சியில், கடம்பூர் பேரூராட்சியில் , காமநாயக்கன்பட்டியில் , அருகே உள்ள வானரமுட்டி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மதிமுக மாவட்ட கழக செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
AND ALSO : The team of FamilyStar celebrated the festival of colours