விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் திருக்கோவிலூரில் தேர்தல் பரப்புரை செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி கவுதம சிகாமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதில் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்தாலே போதும். திமுகவை எதிர்க்கும் வலுவை அதிமுக இன்று இழந்து நிற்கிறது. அதனால் அதிமுக ஒரு பொருட்டாகவே இல்லை. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்க வலுவான கட்சிகள் இல்லை என்கிற நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டை தாண்டி தேசிய அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார். பத்தாண்டு கால பாசிச பாஜக ஆட்சியை அதிகாரத்தில் இருந்து தூக்கி ஏறியும் தன்முனைப்போடு அனைத்து தரப்பு ஜனநாயக அமைப்புகளையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி கண்டுள்ளார் என கூறினார்