20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தமிழ்நாடு டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் வருகிற அக்டோபர் 2 அன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளனர்
உள்துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில் மதுபான ஊழியர்களுக்கு கொடுத்த அறிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு மட்டுமே. சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று மாநில அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் வளாகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு அதன் மாநில சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர் கு பாரதி தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர்,
20 ஆண்டுகளுக்கு மேலாக நிதிநிலை சுமையை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்ற டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் வருகிற அக்டோபர் 2 அன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தபோவதாகவும், பணி நிரந்தரப்படுத்தி காலமுறை முழு ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், முழுமையான ESI, PF போன்ற வசதி ஏற்பட்டு தர வேண்டும் எனவும், அதேபோல துறையின் மாவட்டம் மேலாளர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் மீது ஊழல்கள் அதிகப்படியாக இருப்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 32,000 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 24,000 பணியாளர்கள் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், இதை உடனடியாக கண்டித்து மீதம் உள்ள பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும்,
சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாத்திட பணி பாதுகாப்பு வேண்டி தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் அவசரத் தனி சட்டம் இயற்றிட வேண்டும் எனவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக பணி விதிகள், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கி தர வேண்டும், ஆக இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற அக்டோபர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் உள்துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில் மதுபான ஊழியர்களுக்கு கொடுத்த அறிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு மட்டுமே, அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி
கு பாரதி மாநில சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்.
இதில் வே முருகன் மாநில தலைவர்.
கே குமார் மாநில பொதுச் செயலாளர்.
மத்திய சென்னை மாவட்டம்
டில்லி பாபு மாநில கௌரவ தலைவர்.
எஸ் ராஜசேகர் மத்திய சென்னை மாவட்ட தலைவர்.
பி ரமேஷ் துணைச் செயலாளர்.
M. கிருஷ்ணமூர்த்தி
ஆர் கிருஷ்ணமூர்த்தி.
சங்கர் மற்றும்.
கே ஆர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்