HIGHLIGTHS : அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி புரட்சித்தலைவி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார் அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது – முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
அன்போடு பாசத்தோடு தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்த நாள் நன்னாளில் அதிமுக சார்பில் பிறந்த நாள் விழாவிற்கு முதல் அஞ்சலி செலுத்தியுள்ளோம். பத்திரிக்கை துறையில் எழுச்சியை உருவாக்கியவர். சாதாரண பாமர மக்கள் படிக்கும் வகையில் எழுத்துக்கள் தமிழ் வடிவில் தமிழக மக்களின் கைகளில் கிடைக்க செய்தார்
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு,
அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி புரட்சித்தலைவி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார் அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது. அரசாணையில் என்ன பங்கீடு இருக்கிறதோ அதனை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
அதிமுக பாஜக கூட்டணி பிளவு குறித்த கேள்விக்கு,
தமிழர் தந்தை பிறந்த நாளில் நல்லவைகளை பற்றி மட்டும் பேசுவோம்.