சவால்களை முறியடித்து வாழ்க்கையில் சாதித்த மாணவி
ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து உலகின் முன்னணி நிறுவனத்திற்கு கடந்து சென்ற மாணவி பற்றிய செய்தி இது.கடின
உழைப்பின் மூலம் சவால்களை முறியடித்து வாழ்க்கையில் சாதித்த அனைவருக்கும் இது ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாகும். கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண பொறியியல் கல்லூரியில் படித்த வர்ஷா என்ற மாணவி, தற்போது உலகின் மிகப் பெரிய கிளாசிஃபிகேஷன் சொசைட்டியான பீரோ வெரிடாஸில் பணிபுரிந்து வருகிறார். அந்தக் அனுபவத்தோடுதான் வர்ஷா தற்போது ஊடகங்களின் முன் தோன்றுகிறார். சர்வதேச துறையில் உயர் பதவி பெற கேரளாவில் உள்ள சாதாரண கல்லூரியில் படித்தால் போதும் என இளைஞர்களிடம் கூறி வருகிறாள் அந்த மாணவி. குறிப்பாக, வெளிநாட்டில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வீட்டை அடமானம் வைத்து ப்ளஸ் டூ முடித்து வெளிநாடு செல்லும் இளம் தலைமுறையினர் உள்ள கேரளாவில் (நமது நாட்டில்) இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
வர்ஷாவின் அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டில் பாராமெடிக்கல் துறையில் சாதாரண வேலை பார்ப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். அவள் தனது பாட்டியுடன் ஊரில் இருந்தாள். தனது பெற்றோரால் சேமிக்கவும் சம்பாதிக்கவும் முடியாததால், அந்த சிறுமிக்கு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய கனவுகள் எதுவும் இருக்கவில்லை. அவர் பிளஸ் டூ முடித்த பிறகு, கொச்சியில் உள்ள ஸ்ரீநாராயணா கல்லூரியில் பொறியியலுக்குச் சேர்ந்தார்.
வர்ஷாவின் பெற்றோருக்கு துபாயில் உள்ள ஏரீஸ் குழுமத்தில் வேலை கிடைத்த பிறகு தான் நிலைமைகள் மாற துவங்கியது.
பணியாளர் மற்றும் குழந்தைகள் செயல்திறன் மதிப்பீட்டு முறைகள் மூலம் வர்ஷாவின் திறமையை அங்கீகரித்த இந்த அமைப்பு, அவரது பொறியியல் படிப்புக்கு நிதியுதவி அளித்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனரரும், தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சர் சோஹன் ராய் உருவாக்கிய நிர்வாகக் கருவியான “எஃபிசம்”, அவரது திறமைகளை அடையாளம் கண்டு அத்திறமைகளை மேலும் மெருகேற்ற உதவியது. தனிநபர்கள் தங்கள் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் இந்த அமைப்பின் மூலம் சிறந்த மாணவி என்ற ‘சாதனையை’ அவரால் வெற்றிகரமாக சாதிக்க முடிந்தது.
பொறியியல் படிப்பிற்கு பிறகு “ஷிப் டெக்” என்ற சர்வதேச மாநாடு வர்ஷாவின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் அளவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த மாநாட்டில் “சர்வதேச கடல்சார் மாணவர்” என்ற போட்டிக்கு விண்ணப்பித்தபோது அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. கடல்சார்துறை என்பது முற்றிலும் ஆண் ஆதிக்கம் செலுத்திய துறையாக இருந்தது. ஆனால் உலகின் முன்னணி கடல்சார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் ‘உலகின் சிறந்த கடல்சார் மாணவர்’ என்ற போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்க இந்தப் மாணவிக்கு முடிந்தது. அதன்பிறகுதான், ‘பியூரோ வெரிடாஸ்’ என்ற உலகப் புகழ்பெற்ற அமைப்பு இவரை அதன் பணியாளராக அமர்த்தியது.
“ஏரிஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சர் சோஹன் ராய், எனது தொழில் வழிகாட்டியாகவும், எஃபிசம் எனது
தொழில்முறை வழிகாட்டியாகவும், அத்துடன் என் பெற்றோரின் அன்பும் சவால்களும் என்னுடன் இல்லாவிட்டால் நான் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டேன். அவர்கள் அனைவருக்கும் இந்த விருதை நான் அர்ப்பணிக்கிறேன்” என்று துபாயில் நடந்த ‘ஷிப் டெக்’ சர்வதேச விருது வழங்கும் விழாவில் கடல்சார் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உலகப் புகழ்பெற்ற பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது வர்ஷா இதை கூறினார்.
வாழ்க்கையில் வெற்றி என்பது ஒருவர் எங்கு படிக்கிறார் என்பதை பொறுத்தது அல்ல, மாறாக, ஒரு நபர் தன்னைப் புரிந்து கொண்டு, தடைகளையும் தாண்டி, திறமையை அதிகரிக்கிறாரா என்பதுதான் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் அவசியமானது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சொல்ல விரும்புகிறாள் இந்த மாணவி.