BNI (பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல்), அதன் தர்மபுரி-கிருஷ்ணகிரி மண்டலத்தின் 8வது அத்தியாயமும், இந்தியாவின் 1154வது அத்தியாயமுமான “BNI Mac”-ஐ, டிசம்பர் 12, 2023 அன்று, ஓசூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
BNI என்பது உலகின் மிகப்பெரிய தொழில்முறை “வாய்மொழி” பரிந்துரை சந்தைப்படுத்தல் அமைப்பாகும், இது வணிகத் தலைவர்கள் தங்கள் வணிகத்தை, கட்டமைக்கப்பட்ட உறவு அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் வளர்க்க உதவுகிறது. ஓசூரின் 50க்கும் மேற்பட்ட வெற்றிகரமான வணிகத் தலைவர்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் BNI Mac இன்று தொடங்கப்பட்டு, ₹1.02 கோடி வணிகத்தைப் பதிவு செய்துள்ளது. இதை பிஎன்ஐ குளோபலின் குளோபல் மார்க்கெட்ஸ் தலைவர் திரு மகேஷ் “MAC” சீனிவாசன் மற்றும் பிஎன்ஐயின் தலைமை டிஜிட்டல் அதிகாரி திருமதி மீனா சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.BNI தருமபுரி-கிருஷ்ணகிரி மண்டலம், அதன் செயல் இயக்குநர்களான திரு பேட்ஸ் (பத்மநாபன்), டாக்டர் மூன்ஸ் (டாக்டர் முன்வாரி பத்மநாபன்) மற்றும் திரு யஷஸ்வத் பத்மநாபன் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.BNI Mac Chapter-ன் துவக்கம், திரு சரத்குமார் மற்றும் திரு சிவக்குமார் துரை அவர்களால் நெறிப்படுத்தப்பட்டு
Ms அம்பிகா சாரி, தலைவர்,
Ms பாலகனகலட்சுமி, துணைத் தலைவர் மற்றும் திரு ரஞ்சித் குமார், செயலாளர்/பொருளாளர் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.
BNI, Solo & Home-preneurs தவிர, மைக்ரோ, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் ஒரு தளமாக, 39 ஆண்டுகளுக்கும் மேலாக, 79 நாடுகளில், 3,15,000 உறுப்பினர்களுடன், வெற்றிகரமாக செயல்படுகிறது.BNI Mac கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்டங்களின் வணிக சூழலை வளப்படுத்தும் என, அதன் செயல் இயக்குநர்கள் ஆணித்தரமாக அறிவித்தனர்.அதனைதொடர்ந்து ஒசூர் அடுத்த கோனேரிப்பள்ளியில் உள்ள பெருமாள் மணிமேகலை கல்லூரியில் தொழில் முனைவோர் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைப்பெற்றது, அதனைதொடர்ந்து ஒசூர் அடுத்த கோனேரிப்பள்ளியில் உள்ள பெருமாள் மணிமேகலை கல்லூரியில் தொழில் முனைவோர் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல், அதன் தலைவர் திரு. குமார், BNI Dharmapuri-Krishnagiri-யின் செயல் இயக்குனர்கள் மற்றும் BNI தலைமை டிஜிட்டல் அதிகாரி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. மாணவர்கள் தொழில் முனைவோராக வென்றிட ஊக்கமும், அறிவுரைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டன. மேலும், பிஎன்ஐ இயந்திரா Chapter உறுப்பினர்கள், அவர்களது வியாபார அனுபவங்களையும், வெற்றிக்கான உத்திகளையும் பகிரந்தனர். அந்நிகழ்ச்சியை, BNI Dharmapuri-Krishnagiri-யின் மூத்த ஆலோசகர், திரு ராஜேஷ் கண்ணன் அவர்கள் வழிநடத்தினார்.