தை பூசத் திருவிழாவினை முன்னிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினார்
தை பூசத் திருவிழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டினாயப்பள்ளி முருகன் கோவிலில் ஆயிரக்கானக்கானோர் பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
தைபூசத் திருவிழாவினை கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் திருக்கோவிங்களிலும் தை பூசத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டுநாயனப்பள்ளி ஶ்ரீ மருகன் ஆலயத்தில் தைபூசத் திருவிழா துவங்கி நடைப்பெற்று வருகிறது. தை பூசத் திருவிழாவினை முன்னிட்டு ஶ்ரீ முருகப்பெருமனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரத் தீபாத ரணைகளும் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அலகுகுத்தியும், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். மேலும் கோவிலில் காலை முதலே பத்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவடி எடுத்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து இருந்து முருகப்பெருமாளை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இதே போல ஜெகதேவி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் திருக்கோவில்களிலும் தைபூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
and also : ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்