ஓசூர் ஜூஜூவாடியில் ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனைத்தொடர்ந்து நேற்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி முதல் கோயிலில் பல்வேறு வகையான ஹோமங்கள், பூஜைகள் மற்றும் பாராயணம் ஆகியவை நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு பல்வேறு வகையான பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று கோபுர கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஓசூர், ஜூஜூவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓசூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு உறுப்பினர் அசோகா இரண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த ரெட்டி, கோயில் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.