தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி கலையரங்கம் எதிரில் மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இங்கு ஏராளமான மகளிர் உள்ளீர்கள் நமது ஆட்சிப் பொறுப்பு ஏற்று முதலில் கொண்டுவரப்பட்ட திட்டமான பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எனும் விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமான கலைஞர் உரிமைத் தொகை திட்டம்.இத்திட்டத்தின் மூலம் மாதம் 1.15 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர், நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகப் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது, பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் எனத் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜகவால் 100 நாள் வேலைத் திட்டம் நடைமுறைகளில் இல்லாமல் போய்விட்டது, திமுக பங்கேற்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாட்கள் வேலைத் திட்டம் என்பது வருடத்தில் 100 நாட்களாவது கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில். இந்த திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக நிதியே ஒதுக்கவில்லை.நாம் தேர்தலில் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றக்கூடியது நமது திராவிட முன்னேற்றக் கழகம், நாம் இந்த தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளான 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், அதற்கு ஊதியமாக ரூபாய் 400 வழங்கப்படும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும், சமையல் எரிவாயுவின் விலை 500 ஆக குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், புதூர் பேருந்து நிறுத்தம் முன்பு மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிவலார்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், தமிழ்நாட்டில் வாக்கு கிடையாது – கனிமொழி கருணாநிதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.ஆர். சீனிவாசன், முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் வெற்றி உறுதி என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தல்களையும் போல இல்லை. யார் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தல் இல்லை. யார் ஆட்சியில் இருக்க கூடாது, யார் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை தாண்டி இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த தேர்தல் நிச்சயமாக பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.அதன் பிறகு தேர்தல் நடக்காது, சர்வாதிகாரம் மட்டும்தான் தலை விரித்தாடும். நம்முடைய வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், எத்தனையோ முறை பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து அதானி விஷயத்தைப் பேசியதை தொடர்ந்து, அவரின் பதவியை நீக்கி வழக்குப் போட்டு நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் செய்தார்கள். அதன் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று தான் அவரால் மறுபடியும் பாராளுமன்றத்திற்கு வர முடிந்தது.
தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் உடைய அணைத்து வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தலில் அவர்களுக்கு அந்த பணம் பயன்படக்கூடாது என்பதற்காக. இரண்டு முதலமைச்சர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், ஒரு துணை முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சிறையில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக தான். அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் வழக்கு, கிட்டத்தட்ட பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட 80 சதவீதம் எதிர்க்கட்சிகள் மேல் தான்.எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய இடத்தை புடிங்கிவிடலாம், கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படலாம், வழக்கு உங்கள் மீது பாயும். ஒரு சட்டம் வருகிறது என்றால் அதை எதிர்த்துப் போராடினால் வழக்கு வரும், சிறையில் அடைக்கப்படுவீர்கள்.தமிழ்நாட்டைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிக்காது நமக்கு வர வேண்டிய நிதியும் வராது. நாம் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் 26 பைசா தமிழ்நாட்டிற்கு. மழை, வெள்ளம் வந்தால் கூட நிவாரணம் கூட வராது, எந்த திட்டமும் வராது. நம் கஷ்டப்பட்டபோது பிரதமர் மோடி வந்து எட்டிப் பார்த்தாரா? ஒருமுறை கூட வரவில்லை. ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சுற்று சுற்றி வருகிறார். அடுத்த வாரம் கூட வருகிறார் நான்கு நாட்கள் ஆனால் தமிழ்நாடு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.இங்கே ஒரு ஆளுநர் இருக்கிறார் எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசுவார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கனர், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 75 உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தர். நாம் ஆட்சி பொறுப்பேற்று உடன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டது. இவர் யார் நம் மாநிலத்திற்குத் தமிழகம் என வைக்க கூறுவதற்கு, இவர் அதிகாரியாக இருந்தவராம்.இன்னொரு அதிகாரி வேறு உள்ளார் அண்ணாமலை. என் மண் என் மக்கள் என்று சொல்கிறார், ஆனால் கர்நாடகாவில் இருந்தபோது நான் தமிழன் இல்லை நான் கன்னடகாரன் கடைசி மூச்சு இருக்கு வரை. அப்படி சொன்னவர் கோவை நிற்கிறார், கர்நாடகாவில் எங்காவது நின்று இருக்க வேண்டியது தானே. நம் போராடிப் பெற்ற தமிழ்நாடு என்ற பெயரையே தமிழகம் என்று சொல்கிறார். தமிழகம் சொல்ல வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார், எங்களுக்குச் சொல்லித் தர உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை நாம ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும், நம்மைப் போலக் காங்கிரஸ் கட்சியும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும்.தமிழ் பேசத்தெரியவில்லை எனப் பிரதமர் வருத்தப்படுகிறார். நம்மை ஹிந்தி படியுங்கள் என்கிறார்கள், அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் ஒரு தமிழாசிரியரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.நம்முடைய ஆட்சி வந்தவுடன் உங்களுக்குக் கொடுத்த எல்லா வாக்குறுதியும், மகளிர் உரிமை பேருந்து பயணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம். கேஸ் விலை 500 ரூபாய் என்று குறைப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். கைவிரலைப் பிரித்தால் உதயசூரியன், சேர்த்தால் காங்கிரஸ் சின்னம்.இந்தப் பகுதியில் உள்ள அனைகுட்டம் அணையில் மதகுகள் பழுதுபார்க்க 29 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் 414 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்டு குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசின் சார்பில் வியாபாரிகள் நலனுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சேஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அர்ஜுனா நதியின் குறுக்கே 5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, மேலும் அர்ஜுனா நதியின் நீர்வழி பாதையில் உள்ள முத்துலிங்கபுரம் 10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. நாம் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும்போது மகளீருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் – கனிமொழி கருணாநிதி உறுதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இதில். மதுரை மாநகரச் செயலாளர் கோ.தளபதி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் மற்றும் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: உங்கள் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள், தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் வாழ்வியல் குறித்தான பல்வேறு நூல்களை எழுதியவர். பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர்.இந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்கள் மற்ற இடங்களை எல்லாம் விட, மிகத் தெளிவாக தன்னுடைய முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். அதே நேரத்திலே மொழி, நம்முடைய மாநிலத்தில் உரிமைகள் என்றால் அதற்காக எந்த நிலையிலும் போராடக் கூடியவர்கள்.மதுரை மாவட்டத்தில் நெய்பர் எனும் தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் அண்ணன் அழகிரி ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இப்பொழுது வரை அந்த திட்டம் பாஜகவால் செயல்படுத்தப்படவில்லை.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியோதொடு சரி, அதற்குப் பிறகு எந்த நடவடிக்கை இல்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் ராமநாதபுரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர், அதற்கு எல்லாம் பாஜகவிற்கு நிதி உள்ளது. நமக்கு என்றால் மட்டும் ஜப்பான் நாட்டிலிருந்து நிதி வந்தால் தான் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.மதுரை விமான நிலையத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர், அதைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கப் பலமுறை கேட்டுக் கொண்டோம், இதுவரை அறிவிக்கவில்லை. அதே வேளையில் ஒன்றுமே இல்லாத உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, குஷி நகர், லக்னோவில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்துள்ளது.இந்த பாஜக ஆட்சியில் அதானி, அம்பானிக்கு ஏதும் வேண்டும் என்றால் உடனடியாக செய்வார்கள், நமக்கு என்றால் ஒன்றுமே செய்யமாட்டார்கள். அம்பானி வீட்டுத் திருமணத்திற்காகப் பாதுகாப்புப் படையின் விமான நிலையத்தை 10 நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட்டது.முதியோர் ஓய்வூதியம் வாங்கும் இருவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகப் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளது பாஜக. காரணம் என்னவென்றால் பாஜகவின் முக்கிய பிரமுகர் அவர்களின் நிலத்தை அபகரிக்க முயன்றார், அதற்கு எதிராக இவர்கள் போராடினார்கள் என்ற காரணத்தினால் இவர்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது காங்கிரஸ் அறிவித்த ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். கலைஞர் உரிமைத் தொகை மூலம் வழங்கும் மாதம் ரூபாய் ஆயிரத்துடன், ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.மதுரையில் இளைஞர், இளம்பெண்கள் பயன்பெறும் வகையில், அழகிய கலைஞர் நூலகம் நமது முதலமைச்சர் கொண்டு வந்தார். மதுரை நகரை மாநகராட்சியாக உயர்த்தியது கலைஞர், நாம் முதலமைச்சர் அறிவித்த மதுரைக்கு டைடல் பார்க் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்காக, நிதி, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.