தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சூரங்குடி பேருந்து நிறுத்தம் முன்பு மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: உங்கள் எழுச்சியைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் உருவாகப் போகிறது என்று. இந்த தேர்தல் என்பது நமக்கு மிக முக்கியமான ஒன்று, ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்தபோது அவர்களை விரட்ட எந்த அளவுக்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் போராடினார்களோ அதுபோல பாஜகவை ஒன்றியத்திலிருந்து விரட்ட நாம் போராடிக் கொண்டிருக்கிறோம், இந்த தேர்தல் என்பது இந்தியாவின் விடுதலைக்கான போராட்டம்.பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்க் கருத்து அல்லது கேட்டு அதைத் தரவில்லை என்றால் அமலாக்கத் துறையை ஏவி அவர்களை மீது வழக்கு தொடர்கிறது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய பிரமுகர் 2 விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயன்றார், அவர்கள் நிலம் தர மாட்டேன் என்று சொன்னவுடன் முதியோர் ஓய்வூதியம் வாங்கும் அந்த விவசாயிகள் அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவி வழக்கு தொடர்ந்து அவர்களைக் கொடுமைப்படுத்தி உள்ளது.சாதாரண மக்களைக் கொடுமைப்படுத்தக்கூடிய ஆட்சியாக நரேந்திர மோடியின் ஆட்சி உள்ளது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யவில்லை. இதுவே கார்ப்பரேட் நிறுவனங்கள் அதானி, அம்பானி கடன் தள்ளுபடி என்றால் உடனே செய்கின்றது ஒன்றிய அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 64,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது என்று பேசினார்.
பாஜகவிற்குப் பிடிக்காத விஷயம் தமிழ், திராவிடம், திராவிட மாடல் – கனிமொழி கருணாநிதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: விவசாய மக்கள் இங்குப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க சிறப்பு முகாம் நடத்தினோம். இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இப்பகுதியில் ஒரு கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது.மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, தற்பொழுது அது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளாத்திகுளம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 5.60 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல், பெண்களுக்குப் பேருந்தில் இலவசம் என்ற விடியல் பயணம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது., சராசரியாக ஒரு பெண் ஒரு மாதத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 800 ரூபாய் மேல் சேமிக்கின்றனர்.அதுபோல கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர்க்கு வழங்கப்பட்டு, மாதத்திற்கு 1.15 கோடி மகளிர் பயன்பெறுகின்றனர், ஒரு சிலருக்கு விடுபட்டுப் போயிருக்கலாம், விடுபட்டவர்களுக்கு நிச்சயமாகத் தேர்தல் முடிந்தவுடன் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனளியவர்கள்.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிற்கே மருத்துவர்கள் சென்று அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் கூட யாரும் செய்ய முடியாத திட்டமாக இந்த திட்டம் உள்ளது.நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம், நாம் இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம், நேற்று கனடா நாட்டில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர், இத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியத்துடன், படிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகப்படும் திட்டமாக உள்ளது என்று கருதினார்.திராவிட மாடல் என்று சொன்னாலே பாஜகவிற்கு அதிரும், பாஜகவிற்குப் பிடிக்காத விஷயம் தமிழ், திராவிடம், அதற்கு மேல் ஆளுநர் இன்னும் தமிழும் திராவிடமும் பிடிக்காது. தேர்தல் வந்த உடன் இவர்களுக்குத் தமிழ் மீது பற்று வந்துவிட்டது, நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே தமிழ் படிக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளதாக கூறினார் மோடி.வேண்டுமென்றால் சொல்லுங்கள் தேர்தலுக்குப் பின்பு நீங்கள் சும்மாதான் இருக்கப் போகிறீர்கள், தமிழ்நாட்டில் நிறையத் தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர் அவர்களை அனுப்பி வைத்து உங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்கிறோம்.மழை, வெள்ளம் வந்தால் நம்மை பற்றி கவலை கொள்ளவில்லை. நமது பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை, ஒரு ரூபாய் நிதி கூட நிவாரணமாக வழங்கவில்லை, ஆனால் தேர்தல் என்று வந்தவுடன், வாரத்திற்கு 5 முறை தமிழ்நாட்டை சுற்றிச் சுற்றி வருகிறார்.பாஜக தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் செய்த கட்சி, ஜாதி மதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்து மக்களைப் பிளவுபடுத்திப் பார்க்கக்கூடியது. பாஜக ஆட்சியில் இருக்கும் மணிப்பூரில் தான் இரு இன மக்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி, அன்று பாஜக பற்றவைத்த நெருப்பு இன்று வரை அணியவில்லை. இன்னமும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தான் உள்ளனர். இரண்டு பெண்களை ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தி கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை நம் நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளாரா என்றால் இல்லை, உலகம் முழுவதும் செல்லும் மோடியின் காலடி மணிப்பூரில் பட்டு உள்ளதா என்றாலும் இல்லை. மணிப்பூரில் உள்ள மக்களின் இந்த நிலைக்குக் காரணம் பாஜகவின் அரசியல் தான். இது போன்ற நிலை நாட்டின் எந்த ஒரு மாநிலத்திற்கும் வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கரிசல்குளம் பேருந்து நிறுத்தம் முன்பு மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான ஒன்றாகும், ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு நமக்கும் இடையே நடக்கூடிய போர், இதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம், திமுக பங்கேற்ற காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரே திட்டம் என்ற ஒரே காரணத்தால் தான் ஒன்றிய அரசு, அத்திட்டத்திற்கு நிதி வழங்காமல் இருந்து வருகிறது.பாஜகவின் மோடி ஆட்சி பொறுப்பேற்ற போது இருந்த சமையல் எரிவாயுவின் விலை 410 ஆக இருந்தது, தற்போது 1100க்கும் மேல் உள்ளது. நாம் ஆட்சி வந்தவுடன் சமையல் எரிவாயுவின் விலை 500 ஆக குறைக்கப்படும். நமது கூட்டணிக்குப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன், நாற்பதும் நமதே, நாடும் நமதே எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நாகலாபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு மக்களை நேரடியாகச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: ஜாதி மத பிரிவினை வாதத்தை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்து வருகிறது பாஜக, தமிழ்நாட்டில் அது ஒருபோதும் எடுபடாது.சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல, மகளிர்க்கு பேருந்தில் இலவச பயணம் எனும் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் சராசரியாக மகளிர் ஒரு மாதத்திற்கு 800 ரூபாய்க்கு மேல் சேமிக்கக் கூடிய வாய்ப்பை நமது அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது.நாம் ஒரு ரூபாய் நிதியாக வரி செலுத்தினால், ஒன்றிய அரசு 26 பைசா தான் திருப்பி தருகிறது , ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் வரி பகிர்வு இரட்டிப்பாக உள்ளது, குறிப்பாக உத்திர பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் இரண்டு பைசா வரி பகிர்வு அளிக்கிறது. இந்த நிதி பகிர்விலும் சிறப்பான ஆட்சியை நாம் முதலமைச்சர் அளித்து வருகிறார்.