திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், ஆலங்குளம் தொகுதி மேற்பார்வையாளர் சுரேஷ் ராஜன், தொகுதி பொறுப்பாளர் பொன் செல்வன், ஆலடி எழில் வாணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் JK ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டின் ஜெயகுமார், மகேஷ் மாயவன், இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி சாதாரண மக்களுக்கான ஆட்சி கிடையாது கார்பொரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் சிவப்பு கம்பளங்கள் விரித்து அவர்களை வரவேற்கும். சாதாரண மக்கள் என்றால் அவர்களை விரட்டி அடிக்கும்.கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆட்சி தான் பாஜக, பத்து நாட்களில் பாதுகாப்புப் படை விமான நிலையத்தை அம்பானி வீட்டுக் கல்யாணத்திற்காகப் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி திருமண பரிசளித்தது பாஜக.மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பொழுது சமையல் எரிவாயுவின் விலை 410 ஆக இருந்தது, ஆனால் தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு மேலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாகக் கூறினார் இதுவரை உங்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை. ஒன்றியத்தில் நமது ஆட்சி நடைபெறும் பொழுது நிச்சயம் சமையல் எரிவாயுவின் விலை 500, பெட்ரோல் விலை 75, டீசல் விலை 65 அகவும் குறைக்கப்படும்.நாம் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான கலைஞர் உரிமை திட்டத்தைத் தொடங்கி வைத்து, 1.15 கோடி மகளிருக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்த பின்பு விடுபட்ட மகளிருக்கு நிச்சயம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.பெண்கள் மேற்படிப்பு செல்ல வேண்டும் என்று அவர்களின் தந்தையாக, புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது, மேற்படிப்பு செல்லும் இளைஞர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது.நாம் ஒரு ரூபாய் வரியாக வழங்கினால் 25 பைசா வரி பகிர்வு அளிக்கிறது, ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் வரி பகிர்வு அளிக்கிறது, இந்த வரி பகிர்விலும் மக்களுக்கு இந்தியாவிலே முதன்மையான ஆட்சியை நாம் முதலமைச்சர் நடத்தி வருகிறார்.நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது 1 ரூபாய் கூட நிதியாக வழங்காத ஒன்றிய அரசு, நம் முதலமைச்சர்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிதியாக வழங்கினார். மேலும் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாத வகையில், பாதிக்கப்பட்டவர்கள் நான்கு லட்சம் நிதியை அளித்தார்.பாஜகவினர் உங்களைச் சந்தித்து வாக்கு கேட்டால் அவர்களிடம் திரும்பக் கேளுங்கள், நாங்கள் பாதிக்கப்பட்ட பொழுது ஏன் நிதியினை வழங்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தைத் தொடரவில்லை, சமையல் எரிவதற்கு மானியம் வழங்குவதாகக் கூறினீர்களே ஏன் வழங்கவில்லை எனக் கேளுங்கள்.மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது நாடாளுமன்றத்தில் இருந்து உள்ளேன், மோடி பிரதமராக இருந்த பொழுதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து உள்ளேன், கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது அவரே அதற்குப் பதிலளிப்பார், ஆனால் பிரதமர் ஆக மோடி இருந்த பொழுது நாடாளுமன்றத்திற்கு வருவதே அரிது அப்படி வந்தாலும் 2 நிமிடத்திற்கு மேல் அவர் அங்கு இருக்கமாட்டார் எனத் தெரிவித்தார்.
கனடா நாட்டிலும் திராவிட மாடல் திட்டம் – கனிமொழி கருணாநிதி பெருமிதம்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி,தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக கட்சி வேட்பாளர் Dr.ராணி ஸ்ரீகுமார்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தென்காசி ரத வீதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: உங்களுடைய ஆர்வத்தை, மகிழ்ச்சியைப் பார்க்கும் பொழுது ராணி ஸ்ரீகுமார் வெற்றி என்பது உறுதியான ஒன்று என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த வேலை உணவு கூட கஷ்டப்படுகிறார்கள் போல, அதனால் தான் அவர்களுக்கு 64 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் கருப்பு பணங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும் எனக் கூறினர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்தது என்றால் இல்லை நாம் தான் நம் பணத்தை எடுப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். சாதாரண ஏழை பங்காளனான பிரதமர் மோடி ஒரு வேளை அணியும் உடையின் விலை 13 லட்சம், அதில் மோடி, மோடி என்று இருக்குமாம், அதற்கு 13 லட்சம்.மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்றால் தேர்தல் வருகிறது என்று அர்த்தம், வாரத்தின் ஏழு நாட்கள் தான் உள்ளது, 8 நாட்கள் இருந்தால் 8 நாட்களும் தமிழ்நாட்டிற்கு வந்து விடுவார். பாஜகவிற்கு இப்படி ஒரு போட்டி நடைபெற்று வருகிறது, எப்படியாவது வாக்கு எண்ணிக்கையில் 2 இடத்திற்கு வந்து விடலாம், என்று அது ஒரு போதும் நடக்காது.அருணாசல பிரதேசத்தில் 30 கிராமங்களில் பெயர் சீனா பெயர்களை மாற்றி வெளியிட்டு உள்ளது, லாடக்கில் 2000 சதுர கிமீ பரப்பளவு நிலத்தை அகிரமித்து உள்ளது, அதைப் பற்றிப் பேசாமல் , தற்போது கச்சத்தீவு விவாகரத்தை எடுத்துப் பேசி வருகின்றது. 10 ஆண்டுகள் ஆட்சி இருந்தவர்கள் பாஜக நாம் எத்தனை முறை கச்சத்தீவு குறித்து வாய் திறக்காமலிருந்து விட்டு இப்போது பேசுகிறார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த திட்டத்தை, வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை. இப்போது பிரதமர் மோடி வீடு திட்டம் என மாற்றிவிட்டனர். பேரை மட்டும் மாற்றி விட்டால் போதுமா. ஆனால், அதற்குக் கால்வாசி பைசா அவர்கள் கொடுப்பார்கள், முக்கால்வாசி காசு கொடுப்பது தமிழ்நாடு அரசு.பள்ளி செல்லும் குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தற்பொழுது கனடா நாட்டிலும் காலை உணவு தொடங்கப்பட உள்ளது. கனடா நாட்டுப் பிரதமர் ஒரு ஆசிரியராக பணியாற்றவை பணியாற்றினார். பள்ளி பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு, காலை உணவு என்பது ஒரு நல்ல தெம்பாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். கனடா நாட்டிற்கே முன்னோடியாக நம் தமிழ்நாடு செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.தென்காசி பகுதியில், தொழிற்பேட்டை அமைய உள்ளது, மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்துள்ளோம், மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கான சிறப்பு வசதி, தென்காசி பகுதி முழுவதும் கீமா விளக்கு, குடிநீர் வசதிக்காகத் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக கட்சி வேட்பாளர் Dr.ராணி ஸ்ரீகுமார்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சேர்ந்தமரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான இன்பா ரகு, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தல் என்பது மிக முக்கியமான ஒன்று, நாம் நாட்டின் 2 ஆவது சுதந்திரப் போராட்டம் , இதில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் நாம் வெற்றி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கூடியது, சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சியாக இருக்கும். இல்லையென்றால் அது சர்வாதிகார ஆட்சியாகத் தான் இருக்கும்.100 நாட்கள் வேலைத் திட்டம் என்பது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை, ஒவ்வொரு ஆண்டாக 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்கான நிதியினை குறைத்துக் கொண்டே வந்து, அந்த திட்டத்தை கை விட்டனர். நாம் தேர்தல் அறிக்கை கூறியுள்ளது போல 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், மேலும் இதற்கான ஊதியம் 400 ஆக உயர்த்தப்படும்.2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்று கூறி ஆட்சி அமைத்த மோடி இதுவரை இரண்டு பேருக்குக் கூட வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவில்லை. கேட்டால் பக்கோடா போடுங்கள் அதுவும் ஒரு வேலை தான் எனக் கூறுகின்றனர்.நம் மாநில மகளிர்கள் யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது என்று மகளிர் உதவித் தொகை என்று கூட இல்லாமல் இது அவர்களுக்கான உரிமை தொகை எனப் பெயர் வைத்து, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை பாஜகவில் இருக்கக்கூடிய முன்னாள் நடிகை பிச்சை என்று கொச்சைப்படுத்துகிறார், மழை வெள்ள பாதிப்புகளைச் சரி செய்ய நிதி கேட்டால் ஒன்றிய நிதி அமைச்சர் ஏன் பிச்சை கேட்கிறார்கள் என்று இழிவுபடுத்துகிறார்.கலைஞர் தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல அனைத்து குடும்பங்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டது. அந்த தொலைக்காட்சி இன்னமும் ஓடிக்கொண்டே உள்ளது. ஆனால் அதற்கு அடுத்து வந்த அதிமுக கொடுத்த மிக்ஸி கிரைண்டர் எல்லாம் காயிலான் கடைக்கு ஓடி விட்டது. நம் தலைவர் கலைஞர் சொன்னது போலத் திட்டங்களை நிறைவேற்றினார். அதுபோல நாம் முதலமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகிறார்.
அதிமுகவுக்கும், பாஜகவுக்குக் கூட்டணியில் இல்லை, நாங்கள் இவரும் ஒன்று அல்ல, இருவரும் வேறு வேறு என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி எங்காவது மோடி குறித்துப் பேசி உள்ளாரா, தேர்தலுக்குப் பின் பாஜகவைத் தான் அதிமுக நாடும். மாநில உரிமைகளை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்து விட்டது, இங்கு நாடகமாடிக் கொண்டு இருக்கின்றனர்.அதிமுகவும், பாஜகவும் ஸ்டிக்கர் கட்சிகள் தான், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இந்திரா காந்தி வீடு வழங்கும் திட்டத்தைப் பெயர் மாற்றி பிரதான் மந்திரி வீடு வழங்கும் திட்டம் எனக் கொண்டுவந்துள்ளது, ஆனால் அதற்குக் கால்வாசி நிதி மட்டும்தான் ஒன்றிய பாஜக தருகிறது, மீதமுள்ள முக்கால்வாசி நிதியை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு தருகிறது. ஆனால் அதற்குப் பெயர் பிரதான் மந்திரி வீடு. அதேபோல் அதிமுக எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், சாப்பாடு என்றாலுமே ஸ்டிக்கர் ஒட்டுவதை மறந்தது இல்லை.நாம் மாநில உரிமைகள் மீட்க வேண்டும் என்றால் ஒன்றியத்தில் நமக்கான ஆட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.