கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இதில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், ஒன்றிய செயலாளரகள் மாஸ்டர் மோகன், அருளானந்தம் ஜார்ஜ், மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பொழுது, தன்னைப் போல இரும்பு மனிதர் ஒருவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் தான் இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்று பேசி ஓட்டு வாங்கி, ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன லடாக்கில் பல சதுர கிலோமீட்டர் இடத்தை சீனா ஊடுருவி இருக்கிறது. அதேபோல அருணாச்சலப் பிரதேசத்தில் பல கிராமங்களில், அவர்கள் கிராமங்களை உருவாக்கி வீடு கட்டி 30 இடங்களுக்கு மேல் சீன மொழியில் பெயர் வைத்திருக்கிறார்கள்.தமிழர்கள் மீது அக்கறை வந்துவிட்டது, திடீரென்று கட்சத் தீவு, தமிழர்கள் என்று பேச ஆரம்பித்துவிட்டார். தேர்தல் வந்துவிட்டால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். இவர்தான் நம்மை ஹிந்தியில் படி ஹிந்தியில் பேசு ஹிந்தியில் பெயர் வைக்கிறது என்று சொன்னார்கள். ஏதாவது கேள்வி கேட்டால் கூட இந்தியில் தான் பதில் சொல்வார்கள்.பாராளுமன்றத்தில் கடிதம் எழுதினால் கூட ஹிந்தியில் தான் பதில் வரும். எப்படிப் படிக்கிறது எனக்கும் இந்தி தெரியாது, விஜய் வசந்துக்கு ஹிந்தி தெரியாது. வேண்டுமென்றே ஹிந்தியில் பதில் எழுதுவார்கள், இப்போது திடீரென்று பிரதமருக்குத் தமிழ் மொழி தெரியவில்லை, தமிழ் பேச தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் எங்களை இந்தி படிக்கச் சொன்னீர்கள் அல்லவா நீங்கள் தமிழ் படியுங்கள் அவ்வளவுதான்.இந்த தேர்தல் என்பது உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடைபெறும் தேர்தல். அவர்களின் ஒரே ஆயுதம் பொய் தான். நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால், நமக்குத் திரும்ப அளிக்க கூடிய வரி பகிர்வு 25 பைசா அதுவே பாஜக ஆளும் மாநிலங்கள் எடுத்துக்காட்டாக உத்தரப் பிரதேசம் என்றால் இரட்டிப்பாக 2 ரூபாய் 2 பைசாவாக வரியைப் பகிர்வாக அளிக்கிறது.நாம் தூத்துக்குடி விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் நிதி அளியுங்கள் என்று கோரிக்கை வைத்தால் நிதி இல்லை என்று சொல்லிவிட்டு, அம்பானியின் குடும்ப திருமணத்திற்காகப் பாதுகாப்புப் படை விமான நிலையத்தை, 10 நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றினர்.நம் பிள்ளைகளின் கல்விக் கடனை ரத்து செய்ய நிதி இல்லை, விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்வதற்கு நீதி இல்லை என்று கூறிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 64 ஆயிரம் கோடி ரூபாய் மேல் கடன் தள்ளுபடி செய்து உள்ளது பாஜக.நமது ஆட்சிக்கு வந்தவுடன் சமையல் எரிவாயு விலை 500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும். இப்பகுதியில் உள்ள மீனவ மக்களின் நலனுக்காகக் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு உள்ள ஆளுநர் என்ன படித்துள்ளார் என்று தெரியவில்லை, கால்டுவெல் எவ்வளவு பெரிய அறிஞர் என்று கூட தெரியாமல் பேசி வருகிறார். ஒன்றியத்தில் நமக்கான ஆட்சி அமையும் பொழுது, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று நாம் மட்டுமல்ல, காங்கிரஸ் பேரியக்கமும் கூறியுள்ளது, அவர்களின் ஒரு நாள் ஊதியம் 400 ஆக உயர்த்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி குளச்சல் கடற்கரை முனை பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் தில்லை செல்வம், அயலக அணி மாநில இணை செயலாளர் பாபு வினி பிரைட், மாநில சிறுபான்மை நல உரிமை பிர்வு துணை செயலாளர் ஜோசப் ராஜ், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.முன்னதாக, காமராஜர் ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு, குமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடிப்பவர் நலசங்கத்தினரிடம் கோரிக்கைகளைக் கேட்டு அறிந்தார்.பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தல் என்பது, நமக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக உள்ளது, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் இதுதான் இந்தியாவிற்கே கடைசி தேர்தலாக இருக்கும். தென் மாநிலங்களில் பாஜகவிற்கு எதிராக மக்கள் இருந்து வந்தனர். இப்பொழுது வட மாநிலங்களிலும் மக்கள் பாஜகவிற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மோடி தமிழை கற்றுக் கொள்ளாதது வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், பின் ஏன் நம்மை இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தி திணிப்பு செய்கின்றனர். இப்பொழுது ஒன்றும் குறையில்லை இங்க கன்னியாகுமரியில் நிறைய ஆசிரியர்கள் உள்ளனர். இங்கிருந்து ஒரு தமிழ் ஆசிரியரை அவருக்கு தமிழ் கற்றுக் கொள்ள அனுப்பி வைக்கிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும்.என்னைத் தமிழ்நாட்டுக்காரன் என்று கூறாதீர்கள்,அது எனக்குப் பிடிக்காது. நான் ஒரு கர்நாடகாக்காரன். இறுதி மூச்சு வரை கர்நாடகா காரன் தான் என்று கூறிய அண்ணாமலை, கர்நாடகாவில் இருந்திருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்புகளைத் தடுப்பதற்காக 1,135 கோடி மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குளச்சல் துறைமுகத்தை விரிவு படுத்துவதற்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்குள்ள மீனவ மக்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் முதலில் குரல் கொடுப்பது திமுக தான், கடந்த 10 ஆண்டுகளாகக் கச்சத்தீவையும், இலங்கை கடற்படையினால் மீனவர்கள் தாக்கப்படுவதையும் பற்றி கவலை கொள்ளாத இவர்கள், தேர்தலுக்காக இப்பொழுது கச்சத்தீவு பிரச்சனை குறித்துப் பேசி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருக்க நாம் நினைக்கக்கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைத்து, மக்களுக்கான திட்டங்கள் கொண்டுவரப்படும் ஆகையால் நாற்பதும் நமதே, நாடும் நமதே எனத் தெரிவித்தார்.
சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை – கனிமொழி கருணாநிதி குற்றச்சாட்டு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்தியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலருடன் இருந்தனர்.கனிமொழி கருணாநிதி பரப்புரையில் பேச்சு: தலைவர் கலைஞர் கலர் டிவி தருவோம் எனக் கூறினார் சொன்னதைச் செய்தார், விவசாயக் கடனை ரத்து செய்தார், மக்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சிகள் தான் இன்று இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கிறது.நாம் மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கும் போது, நாம் திட்டங்கள், வாக்குறுதிகள் சொல்லி வாக்கு கேட்போம், ஆனால் பாஜக என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். அதானி, அம்பானி, கார்ப்பரேட் நிறுவனத்திற்காக ஆட்சி நடத்தும் கட்சி தான் பாஜக. தேர்தல் பத்திரங்கள் என்பது சட்டம் பூர்வமாக ஊழலைச் செய்யக்கூடிய ஒரு வழி அதை சுப்ரீம் கோர்ட் நம்முடைய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று எனக் கூறிய நிலையில் பாஜக மிகப்பெரிய மோசடி செய்துள்ளது.சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை. இமாச்சல் மாநிலத்தில் பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது சீனா, இப்பொழுது அருணாச்சலப் பிரதேசத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட 30 கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து அதன் பெயரைச் சீனா மொழியில் மாற்றி உள்ளது.அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகக் கூறி, இதுவரை செய்துள்ளனர், ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தேர்தலுக்காக அதை எல்லாம் சொல்லுவோம் சொன்னதை எல்லாம் செய்ய முடியுமா எனக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி 300, 400 தொகுதிகளில் வெற்றி எனச் சொல்லலாம், அவர் கூறுவதெல்லாம் நடக்கவா போகிறது, அவர் எவ்வளவு பெரிய ஊழல் வாதிகள் என்று மக்களுக்குத் தெரிந்து விட்டது.சட்டப்பூர்வமாகப் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் ஊழல் செய்ய முடியும் என பாஜக காட்டியுள்ளது, தேர்தல் பத்திரம் விவகாரம் இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் சீனாவின் ஆக்கிரமிப்பு நாம் எடுத்துரைத்துப் பேசி வருவதால், கச்சத்தீவு விவகாரத்தை தற்பொழுது பாஜக எழுப்பி உள்ளது. பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இவர்கள் கச்சத்தைவை மீட்டெடு இருக்கலாம் அல்லவா.நாகூரில் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் நமது மேயரும் மாவட்ட செயலாளருமான மகேஷ், பொறுப்பேற்றதற்குப் பின்பு மேம்படுத்தப்பட்டது, இப்பகுதியில் குடிநீர் தேவைக்குப் பூர்த்தி செய்வதற்காகக் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.நாம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை அமைத்தவுடன், சமையல் எரிவாயுவின் விலை 500 ஆகக் குறைக்கப்படும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 அகவும் குறைக்கப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என தெரிவித்தார். வரும் தேர்தலில் நமது வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
and also : Directed by Adams of Sun TV fame, “Can” Movie First Look !