மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன்
எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்தார் தயாநிதிமாறன்.
பாஜக ஆட்சியில் ஆர்டிஐ முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தயாநிதிமாறன் பேட்டி.
அப்போது பேசிய தயாநிதிமாறன், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்கு புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என பொய் என்று தெரிந்தே அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
எனவே இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன்.
24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருக்கிறேன். இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளேன்.
உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.
இதேபோலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார்.
ஆர்டிஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது”, என்றார்.
AND ALSO ; Varlaxmi Sarathkumar’s Psychological Thriller “Sabari”