கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் மாநில காட்சியாக இருந்த திமுக வை மு.க.ஸ்டாலின் வந்த பிறகு அகில இந்திய கட்சியாக மாற்றியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
ராகுல் காத்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அச்சுறுத்த வேண்டியே இத்தகைய கைதுகள் நடைபெறுகிறது. பல்வேறு பிரச்சனைகள் மனவருத்தம் வந்த போதும் கூட்டணி கட்சிகளை கட்டுக்கோப்பாக கொண்டு செல்கிறார் மு.க.ஸ்டாலின். இந்தியாக் கூட்டணி இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் மிகவும் ஒற்றுமையாக உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் மோடி அரசில் பெட்ரோல் விலை குறையாமல் உள்ளது.நாடாளுமன்றத்தில் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வருகிறார் திருமாவளவன்.
திருமணம் செய்யாமல் தனது வாழ்வையே மக்களுக்காக முழுமையாக அளித்தவர் திருமாவளவன் – அமைச்சர் சி.வி.கணேசன் புகழாரம்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு:
இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டி முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். திருமாவளவனுக்கு திருமணம் செய்ய வைக்க வெண்டுமென அவரது தாயார் என்னிடம் கேட்டார். நான் இதனை கேட்டதற்கு திருமாவளவன் நான் மக்களுக்காக உழைக்கிறேன் மக்களுக்காக வாழ்கிறேன் என்று உறுதியாக பேசினார்.
61 வயது கதாநாயகன் திருமாவளவன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சு:
இந்த விழாவின் 61 நமது கதாநாயகன் திருமாவளவன். உங்களுக்காக திருமாவளவன் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார், அவரை வெற்றி பெற வைக்க நீங்கள் உழைக்க வேண்டும். சென்னையிலுள்ள எங்கள் வீட்டில் தான் பானை சின்னத்தை உருவாக்கினோம். யார் அதிக வாக்கு வாங்குவார்கள் என்று சிவசங்கர் நமக்கு சவால் விட்டுள்ளார், உங்களை நம்பி நான் சவாலை ஏற்கிறேன். சிந்தனை செல்வனினுக்கு அவரது தாயார் பேச்சுக்கேற்ற பெயர் வைத்துள்ளனர். நாங்கள் விரும்பும் வகையில் வேட்பாளராக விளங்குகிறார் திருமாவளவன் என்று பேசினார்.
சிதம்பரத்தில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் – அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
சிலர் காலையில் ஒரு கூட்டணி மாலையில் ஒரு கூட்டணியில் பேசி வருகின்றனர்- இவர்களை சமூக நீதி காவலர் என்று சொல்ல முடியுமா? இன்று பணத்திற்காக கூட்டணி வைக்கின்றனர்- எடப்பாடி நான்கு ஆண்டு இல்லாக் கட்டி விட்டு இன்று கட்சிகளை விலைக்கு வாங்குகின்றனர்.
திருமாவளவன் கொள்கை வீரன்- பணத்திற்காக கூட்டணி கைக்காதவர். நாம் அமைதியாக வாழ நாடாளுமன்ற உறுப்பினர் உழைக்கின்றார்.
உரிமைத்தொகையால் ஆண்கள் பெண்களிடன் பணம் கேட்கும் நிலை வந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி. பாஜக ஜூரோ- தொல்.திருமாவளவன் பேச்சு
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் பேச்சு:
அமைச்சர் பன்னீர்செல்வம் நாம் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இரண்டு அமைச்சர்களும் பல நெருக்கடிகளை சந்தித்து நமக்காக பணியாற்றினார்கள். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஓய்வின்றி நமக்காக பணியாற்றி வருகிறார். அடுத்த 22 நாட்கள் கடலூர் விசிக உறுப்பினர்கள் திமுக கூட்டணியினரின் வழிகாட்டுதலில் பணியாற்ற வேண்டும், நானும் அதனை அப்படியே பின்பற்றுவேன். நான் உட்பட கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் மட்டுமே . சமூகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு காரணமாக இருப்பது கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் தான். நான் என்றும் தனிப்பட்ட நபர்களை பழித்து பேசியதல்ல, ஆனால் பாஜக இன்று அவர்களுக்கு எதிராக பேசினால் இந்துக்களுக்கு எதிராக பேசினார் என்று திரித்து பேசுகின்றனர். எந்த காலத்திலும் திருமாவளவன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதில்லை. அண்ணாமலை பேசியது போல சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக நான் இருந்தது இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் பரிந்துரையை அமல்படுத்திபோது அதனை எதிர்த்து பாஜக, தேர்தல் அரசியலிலே இல்லாத விசிக நாங்கள் மதுரையில் வரவேற்று கூட்டம் அமைத்தோம்.
விபி சிங்கிற்கு சிலை வைக்க விசிக கொடுத்த மனுவும் ஒரு காரணம். பாஜக விபி மண்டலக்கு சிலை வைக்குமா??
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய அரசை கவிழ்த்தியவர் பாஜக. அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அப்படிப்பட்ட பாஜக-வுடன் சமூக நீதி பேசும் கட்சிகள் கூட்டணி வைக்க முடியுமா? சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜக- பாமக களுக்குடன் எந்த காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது. அதிமுக திராவிட அடையாளத்துடன் நின்ற கட்சி. பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி நீர்த்து போகும். நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக சென்றவுடன் நான் செய்த முதல் மனு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை உயர்த்தியது தான். பிற்படுத்தப்பட்டோரின் மருத்துவ இடங்களை பெற விசிக வும் ஒரு காரணம். எந்த காலத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நான் ஒருநாளும் செயல்பட்டதில்லை. செயல்படப்போவதும் இல்லை.
AND ALSO : ‘Kalvan’ is releasing on April 4