கண் திருஷ்டி சம்பந்தமாக பல்வேறு விஷயங்களில் இன்று நான் காண்போம்…
கண் திருஷ்டி திருஷ்டி தோஷம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். இது உங்களுக்காக சிறிய குறுகிய ரத்ன வடிவில்…
கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை.
2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்!
சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.
3. கற்பூரம் ஏற்றுதல்!
கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம்.
4. படிகாரம் சுற்றுதல்!
மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம்.
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம்.
6.மண்!
சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. இன்று பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது!
7. எலுமிச்சை குங்குமம்!
சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை நன்றாக தடவி திருஷ்டி சுற்றி விட்டு வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம்.
8. தேங்காய் உடைத்தல்!
ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
10. ஆரத்தி!
கல்யாணம் மற்றும் பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.
குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன.
பொதுவாக நீங்கள் திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் கையில் கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறு இருக்க வேண்டும்!
நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும்.
இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள்
“தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி… தீயசக்திகள் திருஷ்டி” என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன்.
திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம்.
அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்க வேண்டும்.
பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மேலும் மிக முக்கியமான நாளான அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது.
அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும்.
சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.
இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் மனக்குழப்பங்கள் நஷ்டங்கள் தீராத வியாதிகள்…
வந்த வியாதி குணமடையாமல்,
வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா?
பலன் கிடைப்பதனால் தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப் போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை!
எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசிரத்தில் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்.!
and also : CHENNAI TTD SRI PADMAVATHI AMMAVARI – THIRUMANJANAM STILLS