பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணன், பரவாஸூதேவன் என்ற திருநாமத்தோடு வைகுந்தத்தில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியுடன் வீற்றிருக்கிறார்!
இதுவே பரத்வம் என்கிற உயர்ந்த நிலையாகும்! இவருடன் தனது அடியவர்களான நித்யசூரிகளும் உள்ளனர்!
ஸ்ரீமந் நாராயணனே திருப்பாற்கடலில் ஷீராப்திநாதனாக ஆதிசேஷன் மீது ஸயனித்துக் கொண்ட வ்யூக நிலையில் உள்ளார்!
இங்கு இவருடன் ஸ்ரீதேவி என்கிற மஹாலக்ஷ்மி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்!
பரமபதநாதனான எம்பெருமான் நம்மைக் காத்தருள, தன்னையே நால்வராகப் பிரித்துக்கொண்டு அருள்பாலிக்கிறான்!
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் ஸ்ரீவைகுண்டநாதனுமாகவும், வ்யூகவாஸூதேவனாகவும் இருந்து அருள்கிறார்!
ப்ரளயத்தின்போது உலகைத் தன்னுள் ஒடுக்கும் ஸங்கர்ஷணன் வேதங்களை அருளினான்;
உலகைப் படைக்கும் ப்ரத்யும்னன் ஜீவாத்மாக்களை வேதமார்க்கத்துடன் இணைத்து அருள்கிறான்;
உலகைக் காக்கும் அநிருத்னன் வேதத்தின் வழி நடப்பவர்களுக்குத் தத்வஞானத்தை அருள்கிறான்;
பர, வ்யூக நிலைகள் எப்பொழுதும் எல்லா காலங்களிலும் சாஸ்வதமானது!
விபவம் அநிருத்னன், வ்யூக நிலையில் இருந்து அவ்வப்பொழுது நல்லவர்களை காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை காக்கவும் பற்பல அவதாரங்களை எடுக்கிறார்! இந்த அவதாரங்கள் விபவம் எனப்படும்!
அவதாரங்கள் அந்தந்த யுகங்களில் மட்டுமே நடைபெற்றன.
மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள் க்ருதயுகத்தில் நடைபெற்றன;
ந்ருஸிம்ஹ, வாமன, பரசுராம மற்றும் ஸ்ரீராம அவதாரங்கள் த்ரேதா யுகத்தில் நடைபெற்றன;
பலராம, ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள் த்வாபர யுகத்தில் நடைபெற்றன;
கல்கி அவதாரம் கலியுகத்தில் நடைபெற்றுவருகின்றது!
இந்த பத்து அவதாரங்களுல் வராக, ந்ருஸிம்ஹ, ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களே முதன்மையானவை. ஏனெனில் இந்த அவதாரங்களில் மட்டுமே எம்பெருமான் நேராகவேத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டினார்!
நம் அனைவருள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை!
பர, வ்யூக, விபவ நிலைகளை நாம் காண முடியாதாகையால், இவர்களின் பிரதிநிதியாக வந்த நிலைதான் அர்ச்சை!
அர்ச்சை நிலையில் எழுந்தருளியிருக்கும் தலமே திவ்யதேசம் எனப்படுகிறது! இதுவே 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசமாகும்!
and also : CHENNAI TTD SRI PADMAVATHI AMMAVARI – PUSHPAYAGAM