சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளிகள் வர நுழைவு வரியை எம் ஜி ஆர் போட்டார், அதை வனிகர்கள் எதிர்த்தனர்.
வியாபாரிகள் என்றாலே கொள்ளை அடிப்பவர்கள் என்ற கருத்தை திணிப்பதில் அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாக உள்ளனர். அதன் மத்திய அரசு அழுத்தத்தில் நுழைவு வரி அகற்றப்பட்டது.
உணர்வு மிக்க வணிகர்கள் தவிர வேறு யாருக்கும் வணிகர் தினம் முக்கியமாக இல்லை. வளர்ந்து
மே ஒன்றாம் தேதி உலக அளவில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது, அதற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் 5 ஆம் தேதி வணிகர்களுக்கான தினம் அன்று அனைத்து வணிகர்களும் விடுமுறை விட வேண்டும் மாநில மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.
இந்திய ஜனநாயக நாடு என்ற போர்வையில் இருக்கும் சர்வாதிகார நாடு, எது என்றாலும் போராட்டம் செய்தால் தான் நடக்கிறது.
மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தில் அனைத்து வணிகர்களும் விடுமுறை விட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து காட்ட வேண்டும்.
பொதுமக்களுக்கு வணிகர்கள் உடன் நின்று ஒரு நாள் முன்பே பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், கார்பரேட் கம்பெனிகளை தேடி செல்லக் கூடாது.
எங்களை போல் அமைப்பு இல்லை என்றால், வணிகர்கள் தாக்கப்படுவீர்கள்.
கொரோனா காலத்தில் சிறு சிறு வணிகர்கள் தான் கடையை திறந்து மக்களுக்கு உதவினர். இயக்கங்கள் வேறு என்றாலும் கொள்கைகள் ஒன்று தான்.
ஒட்டு மொத்தமாக வியாபாரிகள் கடையை மூடி நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று காட்ட வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் மே 5 ஆம் தேதி கல் எறிந்தனர், அதை போல் செய்ய சொல்கிறார்களா?
இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் இதே நிலை தொடர்ந்தால் எங்களை போன்ற சுதேசி இயக்கங்கள் வன்முறையை கையில் எடுக்க வேண்டி வரும்.
போதை கலாச்சாரத்தில் முதலில் பாதிக்கப்படுவது வியாபாரிகள் தான், அவர்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்டது தான் வியாபாரிகள் சங்கம்.
அனைத்து பொருட்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது வியாபாரியின் கடமை. உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து அந்த பொருள்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பொருளுக்கு மாற்றாக இதை பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், சுதேசி கொள்கையை விதைத்து கொண்டு பதிய வைத்துக் கொண்டு தான் வருகிறோம், என்றார்.
AND ALSO : கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!