சைக்கிளிங் சாம்பியன்சிப் போட்டியில் பதக்கமும் வென்ற வீராங்கனை ஸ்ரீமதி கனிமொழி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்சிப் போட்டியில் குழுப் போட்டியாக நடைபெற்ற 4 கி.மீ மற்றும் விரைவோட்டத்தில் தங்கம் பதக்கமும், தனித்து 500 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதித்திருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரீமதி அவர்கள் தூத்துக்குடி டிஎஸ்எப் கிராண்ட் பிளாசா ஹோட்டலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்து வாழ்த்து பெற்றார். சைக்கிளிங் சாம்பியன் ஸ்ரீமதிக்கு விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களைப் (விளையாட்டு காலணி,தலைக்கவசம், சைக்கிள் உபகரணங்கள்) கனிமொழி எம்.பி பரிசளித்தார்.