அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக விழா : ஓசூரில் காய்கறி சந்தை வியாபாரிகள் விவசாயிகள் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராமர் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், ஆன்மீகவாதிகள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபட்டனர். அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் ஓசூரில் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காய்கறி சந்தையில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் காய்கறி சந்தையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் லட்டுகள் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. இதில் கண்ணை கவரும் விதமாக கோலாட்டங்களும் நடைபெற்றன.