
vaanathi press
வானதி சீனிவாசன் பேட்டி

தங்கள் இயலாமையை மறைக்க இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு மாநில உரிமையில் தலையிட கூடாது என்று கூறிவிட்டு , மத்திய அரசு தலையிட்டு கர்நாடகாவிடமிருந்து நீரை பெற வேண்டும் என திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறது. டெல்டா விவசாயிகளின் நலனுக்காக , காவிரி உரிமைக்காக எப்போதும் துணை நிற்போம். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது இதைபோன்ற எந்த சிக்கலும் ஏற்படவில்லை. திமுக – காங் கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்தாலும் காவிரியில் உரிய நீரை பெற முடியவில்லை. பாஜக ஒரு தேசிய கட்சி , அந்தந்த மாநிலங்களில் மாநில உரிமைக்காக பாஜகவினர் குரல் கொடுப்பது இயல்புதான். ஆனால் கூட்டணியில் இருந்தும் மற்றொரு அரசுடன் இவர்களால் பேச முடியவில்லை.