சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அகில் பாரத ஹிந்து மஹாசபா தேசிய தலைவர் முன்னா குமார் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டு மாநில தலைவராக ஆறுமுகம் மாதேஷ் என்பவரை அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தலைவர் முன்னாள் குமார்,
இந்தியாவின் மூத்த அரசியல் கட்சி அகில் பாரத ஹிந்து மகாசபா.
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்துக்கள் நலனுக்காகவும் இந்துத்துவத்தை இந்தியாவில் விரிவு படுத்தவும் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒற்றை சட்டம் தான் இந்து , முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைவருக்கும் உண்டு.
அகில் பாரத ஹிந்து மஹாசபா தமிழ்நாடு தலைவர் ஆறுமுகம் மாதேஷ் தர்மபுரி தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்றார்.
மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் பேசும் போது,
தேசிய தலைமை அறிவுறுத்தல் படி இங்கு இந்துக்கள் கோவில்கள் பல இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது அதை மாற்ற நடவிக்கை எடுக்கப்பட உள்ளது.
கோவில்களை மீட்க வேண்டும், அறநிலையத்துறையை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் சிதறி இருக்கும் இந்துக்களை ஒன்றிணை த்து பழமையான சிதிலமடைந்த கோவில்கள் பட்டியலுக்கு ஒவ்வொன்றாக புனரமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம், தேர்தல் கட்டுப்பாடுகள் முடிந்தவுடன் தமிழக அரசு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவற்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆறுமுகம் மாதேஷ்,
இந்து மக்கள் விழிப்புணர்வுக்காக தியானம் மற்றும் உடற்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றன அவற்றை தொடர்ந்து செய்வோம், இந்து மக்களை ஒருங்கிணைப்போம் என்றார்.