அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் : ஓசூரில் கேபி முனுசாமி பேட்டி
அதிமுக சார்பில் வரும் 11ஆம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பர்கூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று ஓசூரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படாதவர்கள், அதிமுக தலைமையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி உருவாகும், தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகளில் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்த கட்சி 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட பெரிய இயக்கம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இயக்கத்தின் தலைமையில் கூட்டணி இருக்கும் அது தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் வருகின்ற கட்சிகளை நாங்கள் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம் என தெரிவித்தார்.
and also ; தமிழக வெற்றி கழகம் பெயர் பலகை பலகை திறப்பு விழா