கலைஞர் உரிமை தொகையில் 63 லட்சம் பெண்கள் நீட்க பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டிய அவர், இரண்டரை வருடங்கள் முடிந்த காலத்தை கணக்கிட்டு, வங்கி கணக்கில் பெண்களுக்கு பணத்தை செலுத்துமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தனியார் பள்ளியில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து ஆயுஸ் கோமம், கோ பூஜை , கோ தானம் ஆகியவைகளை நடத்தினர்.அதனை தொடர்ந்து, கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதில் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், பாரத பிரதமர் நீடூடி வாழ வேண்டும் என்றார்.மேலும், அதற்காக ஆயூஸ் கோமம் நடத்தி கோ தானம் கொடுத்ததாக அவர் தெரிவித்த, அவர் ஆன்மீக ரீதியாக இதில் நமக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.நாளை பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு, எல்லா குலத்தையும் சார்ந்தவர்களை தொழில் முனைவர்களாக, ஊக்கும் விக்கும் விதமாக விஸ்வ கர்மா நிகழ்ச்சியை துவங்கியதாக அவர் தெரிவித்தார்.
1000 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், சுய உதவி குழுக்கள் மூலம், பல லட்சம் பெண்களை லட்சாதிபதியாக ஆக்குவேன் என்று பாரத பிரதமர் சபதம் ஏற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.இது எல்லாம் எப்படி என்றால் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது போல் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ஜந்தன் திட்டத்தின் மூலம் 56 கோடி நபர்கள் சேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்த அவர் இதில் 56 சதவீதம் பெண்கள் என்றார். இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வரும் பாரத பிரதமருக்கு , இந்த பிறந்த நாளை முன்னிட்டு கோ பூஜை, கோ தானம் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
கலைஞர் உரிமை தொகையில் 63 லட்சம் பெண்கள் நீட்கபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டிய அவர், இரண்டரை வருடங்கள் முடிந்த காலத்தை கணக்கிட்டு, வங்கி கணக்கில் பெண்களுக்கு பணத்தை செலுத்துமாறு அவர் கூறினார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதியான செந்தில் பாலாஜியிடம், அமலாக்க துறையினர் நீங்கள் ஏன் பாஜகவில் இணைய கூடாது என்று செய்தியாளர் எழுதிய கேள்விக்கு, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், இது போன்ற செயல்களில் அமலாக்கத்துறை ஈடுபட மாட்டர்கள் என்றார்.
+ There are no comments
Add yours