
kanim
தூத்துக்குடியில் இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகமான ‘ஓலைப்புட்டு’ இரண்டு ஆண்டு தொடக்க விழா: கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்பு
தூத்துக்குடியில் உள்ள இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகமான ஓலைப்புட்டு இரண்டு ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு, இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தை நடத்தும் அனைவர்க்கும் வாழ்த்துக் கூறி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், UNHCR கள அலுவலக தலைமை அலுவலர் சச்சிதானந்த வளன், OFERR திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்ன ராஜசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தச்சர் தெரு மாநகராட்சி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைப்புட்டு உணவகம் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் உதவியுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் நிதி உதவி அளித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் மற்றும் ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு, தமிழ்நாடு அரசு ஆகியவை இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. முகாம்களில் சமைப்பதையே இப்போது உணவகத்தில் சமைத்து விற்பனை செய்கின்றனர்.
இலங்கை தமிழ் பெண்கள் நடத்தும் ‘ஓலைப்புட்டு உணவகம்’ தூத்துக்குடியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.