
k
பாஜக ஆட்சி – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி கருணாநிதி எம்.பி
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கம் திறப்பு விழா இன்று (08/11/2023) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு, தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் உரையாற்றி பின்பு பத்திரிக்கையாக சந்தித்தார்.
பத்திரிக்கையாளர்: தமிழ்நாடு பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கனிமொழி எம்.பி: அவர் ஆட்சிக்கு வந்தால் தானே, அது ஒருபோதும் நடக்காது அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.