கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்.15ம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Estimated read time 1 min read
Spread the love

காஞ்சிபுரத்தில் வரும் 15ம் தேதி துவக்க விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

* மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

* புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியருக்கு ரூ.1000* இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டம்
* மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டம்
ஆகிய 5 திட்டங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதனை முறையாகச் செயல்படுத்தினாலே, அதனால் பயனடைந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு நம்மைப் பாராட்டி பேசுவார்கள். அத்தகைய பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* அரசு பணியாளர்கள் 3 லட்சம் விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் திட்டத்தின்படி தகுதியில்லாத 57 லட்சம் விண்ணப்பங்களை அதிகாரிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

நிராகரித்துள்ளனர். மேலும் இந்த 57 லட்சத்தில் 3 லட்சம் பேர் அரசு துறைகளில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். அதேபோல, மற்ற நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை சொந்தமாக கார், 3600 யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் மகளிர், அதிகப்படியான ஆண்டு வருமானம் உள்ளிட்ட விஷயங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன. அதேபோல, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் அவர்களின் கைப்பேசி எண்களுக்கு சரியான விளக்கம் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours