பழனியில் போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம்
பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம். திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு தங்கப்பாண்டி(28) என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக பழனி தாலுகா போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ வழக்கின் கீழ் தங்கபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், தங்கப்பாண்டிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
+ There are no comments
Add yours